முழு கொள்ளளவை எட்டிய வீராணம்.. 43 மடங்கு தரமான சம்பவத்தை தரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்!
சென்னை: வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 2019-ஆம் ஆண்டை காட்டிலும் 43 மடங்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலை சிறப்பாக இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: வீராணம் ஏரி வறண்டுவிட்டதால் கடந்த 2019ஆம் ஆண்டு கோடை காலம் சென்னையில் மிகவும் மோசமாக இருந்தது, அது போல் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2017 ஆம் ஆண்டும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் சென்னையில் 2019-இல் நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

வீராணம் ஏரி
சென்னையில் குடிநீர் பஞ்சம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. போனது போகட்டும், ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏரிகளில் தண்ணீர் சேமிப்பில் நாம் இரண்டாவது முறையாக வெற்றி கண்டுள்ளோம். காவிரி நீருக்கு நன்றி சொல்வோம். வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியுள்ளது. இன்று வரை பூண்டியில் உள்ள ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

குறைந்த மழை
ராயலசீமா மற்றும் ஆந்திரத்தின் தெற்கு பகுதியில் இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் தண்ணீர் பற்றாக்குறை என்பது குறைவாகவே இருக்கும். கிருஷ்ணா ஆற்று பகுதிகளான மகாபலேஷ்வர் மற்றும் துங்கபத்ராவில் உள்ள ஆகும்பே ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு குறைந்த மழை பொழிவை பெற்றன.

முக்கிய பகுதிகள்
எனினும் ஸ்ரீசைலம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த அடைமழை மேற்கண்ட இடங்களில் குறைந்த மழைக்கு ஈடுகட்டியது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள அணைகளில் ஏராளமான நீர் தேங்கியுள்ளது. தென் சென்னையிலும் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. மத்திய சென்னையில் முக்கிய பகுதிகளில் அந்தளவுக்கு மழை கைகொடுக்கவில்லை. மற்ற இடங்களில் பின்னி பெடலெடுக்கிறது.

தயார் நிலை
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாகவே உள்ளது. இதனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் விஷயங்கள் சென்னைக்கு சிறப்பானதை கொடுக்கும். அந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை காலமும் தயார் நிலையில் இருக்கும் என்றார் தமிழ்நாடு வெதர்மேன்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications