திருவாரூர் தொகுதியில் களம் காண மு.க. ஸ்டாலின் விருப்பம்.... திருமாவளவன் வரவேற்பு
Recommended Video

சென்னை: திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட விரும்புவதாக கூறியிருப்பதை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பணிக்காக, சென்னை ஐசிஎப் கக்கன்ஜி பகுதியில் 43 ஆண்டுகளாக உள்ள தேவாலயத்தை அகற்றக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தினை பேராயர் சற்குணம் மற்றும் திருமாவளவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
[நான், எனது என எப்போதும் தற்பெருமை தான் பேசுவீர்களா? பிரதமர் மோடியின் பேட்டியை விமர்சித்த காங்கிரஸ்]

அரசியல் உள் நோக்கம்
குடிசை மாற்று வாரியத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் இந்த தேவாலயத்தை அரசு இடிக்க கூடாது என்றார். ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவித்து இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
ஒரே ஒரு தொகுதிக்கு தேர்தல் அறிவித்து இருப்பதில் அரசியல் உள் நோக்கம் இருக்கிறது.

வரவேற்கிறேன்
திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன். ஆளுநர் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும் கிடப்பில் போட்டுள்ளார். மாநில அரசின் தேவையை நிறைவேற்றாமல், மத்திய அரசின் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவராக ஆளுநர் இருக்கிறார்.

மோடி பேசாமல் இருந்தது நல்லது
மோடி தமிழகத்தை பற்றி எதுவும் பேசாமல், தாமரை மலரும் என்று மட்டும் பேசுகிறார்.
ஒரு வகையில் அவருடைய பத்திரிகையாளர் நேர்காணலின் போது, தமிழகத்தை பற்றி எதுவும் பேசாமல் இருப்பது கூட நல்லது தான்.

சந்தேகம் இருக்கிறது
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, அமைச்சர்களுக்கு கூட முழுமையாக தெரியாமல் இருப்பதும், அதிகாரிகளும் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் இந்த விவகாரத்தை நடுநிலையோடு கையாளுமா, அல்லது ஏதேனும் அரசியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகுமா என்ற சந்தேகம் இருக்கிறது என்றும் கூறினார்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications