"இடிக்குதே".. பிடிஆரின் பதவி மாற்றம் எதுக்காக தெரியுமா? என்னாது "இதுதான்" காரணமா.. ஒண்ணுமே புரியலயே
சென்னை: பிடிஆருக்கான பதவி மாற்றம் நடந்து 2 நாட்கள் ஆன போதிலும் அதற்கான சலசலப்புகள் இன்னமும் குறையவில்லை.. இது தொடர்பான விவாதங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளன.
பிடிஆர் பதவி மாற்றம் பல்வேறு விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அத்துடன் எதற்காக பிடிஆர் பதவி மாற்றம் செய்யப்பட்டார் என்ற சந்தேகங்களும், யூகங்களும் இன்னமும் சோஷியல்மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
வருவாய் ஈட்டுவது, கடனை குறைப்பது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்ற பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி, நேரடியாகவே அவைகளை கண்காணித்தவர்..

செலவுகள்: இவைகளுடன் ஆளுநர் மாளிகையின் செலவீனத்தில் கணக்கு கேட்டதும் இணைந்து கொண்டது, பிடிஆருக்கான நெருக்கடியை உருவாக்கியது.. கடைசியில், உறுதிப்படுத்தப்படாத ஆடியோ விவகாரத்தில் வந்து விவகாரம் முடிந்தது ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
மதுரை மாநகராட்சியின் மேயர் தேர்தலில், அமைச்சர் பி.மூர்த்தி, பொன்முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் முன்நிறுத்திய வேட்பாளர்கள், ஓரங்கட்டப்பட்டு, பிடிஆர் முன்நிறுத்திய வேட்பாளரான இந்திராணியையே கட்சித்தலைமை மேயராக்கியபோதே இந்த அதிருப்தி வெளிப்பட்டதாக சொல்கிறார்கள்..
மதுரை மாநகராட்சி: இதனால், மாநகராட்சி நிர்வாகத்திலும் அவர்கள் யாரும் தலையிடாமலேயே இருந்து வந்ததால், மாநகர திமுக நிர்வாகிகளுக்கும், பிடிஆர் தரப்புக்கும் இடையே அதிருப்திகள் வெடித்ததாக தெரிகிறது.. அதிலும், சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் இந்த அதிருப்தி வெளிப்படையாகவே தென்பட்டது... எனவே, மதுரை மாவட்ட திமுகவில் ஏற்பட்ட விவகாரங்கள்தான் பிடிஆர் பதவி மாற்றத்துக்கு காரணம் இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள்.
அதேபோல, துறை ரீதியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும், மூத்த அமைச்சர்களுடன் முரண்பாடு இருந்ததாக சொல்கிறார்கள்.. நிதி சிக்கனம் என்ற காரணத்தை பிடிஆர் தரப்பில் சொன்னாலும், சில சீனியர்கள் அதை ஏற்கவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட சில அமைச்சர்களே அப்செட் ஆனதாக சொல்கிறார்கள்.. போதாக்குறைக்கு, ஆடியோ விவகாரம், அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் நீடித்த பிரச்சினை போன்றவைகளும் இணைந்து கொண்டதுதான் பிடிஆர் பதவி மாற்றப்பட்டதாக மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள்.

தங்கம் தென்னரசு: இன்னும் 3 ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமான சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே பிடிஆரிடம் இருந்த நிதி இலாகாவை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. இரண்டு பெரிய துறைகளை சமாளிப்பது கடினம் என்பதால் அவரிடம் இருந்த தொழில்துறை டிஆர்பி ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்..
சீனாவில் இருந்து தொழில் நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்கள் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது.. குறிப்பாக அவர்கள் தமிழகத்தை விரும்புகிறார்கள். இதனால் முதலீடுகள் அதிக அளவில் குவிகின்றன.. டிஆர்பி ராஜா இளையவர் என்பதுடன், அவரது 'நட்பு' வட்டாரமும் பெரியது. எனவே, கூடுதலான கவனமும் செலுத்த முடியும் என்று அந்த வட்டாரம் கேட்டுக்கொண்டதாலேயே, அவரிடம் இந்த இலாகா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
யூகங்கள் : இப்படி யூகமான காரணங்கள் வெவ்வேறு சொல்லப்பட்டாலும், தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டிருப்பதால், திமுகவில் அவரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் திமுக தரப்பில் இருந்தே சிலர் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. ஆக, கட்சி ரீதியாகவும்சரி, துறை ரீதியாகவும் சரி, பிடிஆருக்கான முக்கியத்துவம் குறைந்தே இருப்பதாகவும், திறமையான நிதியமைச்சரை திமுக இழந்திருக்கக்கூடாது என்றும் பொருமல்கள் வெடித்தபடியே உள்ளன.. பிடிஆருக்கான ஆதரவுகளும் சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே உள்ளன..!!
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்! -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications