Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநர்.. சட்டசபையில் மீண்டும் நிறைவேறிய 10 மசோதாக்கள்.. லிஸ்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படும் 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக சட்டசபையில் நிறைவேறும் மசோதாக்கள் ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

What are the 10 bills which is long pending for Governor RN Ravi Approval? details here

இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி பல மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைப்பதாக தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா, நீட் விலக்கு மசோதா உள்ளிட்டவை முதல் பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்க மறுத்து திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து இந்த 2 மசோதாக்களை மீண்டும் சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநரை பொறுத்தமட்டில் 2வது முறையாக ஒரு மசோதா வந்தால் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டியது கட்டாயமாகும். அப்படித்தான் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேறிய நிலையில் நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்என் ரவி மூலம் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் இன்று தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு இந்த சட்டசபை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நீண்டகாலமாக ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது சட்டசபை உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். அதன்பிறகு இறுதியாக 10 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆளுநரை பொறுத்தமட்டில் மசோதாவை ஒரு முறை மட்டுமே திருப்பி அனுப்ப முடியும் என்பதால் இந்த 10 மசோதாவுக்கும் ஒப்புதல் கையெழுத்து போடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் விபரம் வருமாறு: 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, 2022ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, சென்னை திருத்த சட்ட முடிவு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் 2ம் திருத்த சட்ட முன்வடிவு, தமிழ் பல்கலைக்கழக 2 ஆம் திருத்த சட்ட முன்வடிவு உள்ளிட்டவை அடங்கும்.

இதுதவிர 2023ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவு உள்ளிட்டவை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143ன் கீழ் மறுஆய்வு செய்வதற்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
*******

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+