லோக்சபா 2024 தேர்தலில்.. பாஜகவிற்கு ரொம்ப கஷ்டம்.. தாக்க போகும் 6 அம்புகள்.. காவிக்கு சிக்கலாமே!
சென்னை: லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவிற்கு 6 விஷயங்கள் வரும் லோக்சபா தேர்தலில் எதிராக திரும்பும் என்று அரசியல் வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் சில கருத்து கணிப்புகள் பாஜகவிற்கு கண்டிப்பாக மிகப்பெரிய மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

உதாரணமாக டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொரு பக்கம் PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இன்னொரு கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது

மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
6 விஷயங்கள்: இப்படி லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பாஜகவிற்கு 6 விஷயங்கள் வரும் லோக்சபா தேர்தலில் எதிராக திரும்பும் என்று அரசியல் வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பார்த்தா டாஸ் என்ற பிரபல அரசியல் வல்லுனர் செய்துள்ள போஸ்டில், பாஜக 2019 ஆம் ஆண்டை போல மீண்டும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் வெல்ல முடியுமா?வாக்கு பங்கின் அடிப்படையில் வடக்கில் பாஜக மீண்டும் வெல்ல முடியுமா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதுதான். ஏனென்றால்

1. சீக்கிய சமூகத்தினர் வாக்களிக்க மாட்டார்கள்
2. SC & ST சமூகத்தினர் 2019 இல் செய்தது போல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க மாட்டார்கள்
3. விவசாயத்தை நம்பி வாழ்வாதாரம் கொண்ட விவசாயிகள் 2019ல் செய்தது போல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வாய்ப்பில்லை.
4. மோடி ஜி/பாஜக மீது இளைஞர்கள் சிறிது அதிருப்தி அடைந்துள்ளனர்
5. NRC+CAA பிரச்சினை இல்லாத காரணத்தால் 2024 இல் மத பிளவு குறைவாக உள்ளது
6. பாலகோட் தாக்குதல் போன்ற உணர்ச்சிக் காரணி இந்த தேர்தலில் காணவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த 6 விஷயங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பாஜகவின் வெற்றி இந்த முறை அவ்வளவு எளிதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications