பாமக போட்டியிடப் போகும் 23 தொகுதிகள் எவை? இன்றே வெளியாகிறது அறிவிப்பு.. லிஸ்டில் வேளச்சேரி?
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகின்றன என்பது பற்றி இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தலைவர்களிடையே கையெழுத்து போடப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
திருப்போரூர், விக்கிரவாண்டி, செங்கல்பட்டு, சங்கராபுரம், கும்மிடிபூண்டி, ஆரணி, பென்னாகரம், காட்டுமன்னார்கோவில், வீரபாண்டி, ஓசூர், நெய்வேலி, கலசபாக்கம், திண்டிவனம், பண்ருட்டி, வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட விரும்புவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இன்று மாலைக்குள்ளாக, எந்தெந்த தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடப் போகிறது என்ற தகவல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது குறிப்பிடதக்கது.