Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா இருங்க.. அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி போட்ட ஆர்டர்! பேசியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாட்டின் மாநாட்டுக் குழுவினரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

What are the issues discussed in admk meeting today chaired by edappadi palanisamy

மேலும், வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுரை மாநாட்டுக்குப் பின்னர், அதிமுக எழுச்சி பெற்றுள்ளதாகவும், தற்போது அதிமுக ஒரே தலைமையின் கீழ் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும், அதைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தலும் தமிழகத்தில் வருவதற்கான மேகங்கள்தான் கூடியிருக்கிறது. அப்படி தேர்தல் வரும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். திமுக ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

மின்சார கட்டணம் 'ஷாக்' அடிக்கிறது. வீட்டு வரி, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சியினரின் அராஜகம், உள்ளாட்சி பிரதிநிதிகளால் ஏற்படும் அடாவடிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் மூடுவிழா நடத்தப்படுகிறது. அம்மா உணவகங்கள் திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முயற்சி நடந்து வருகிறது. மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் காணாமல் போய்விட்டது. அதேபோல், தாலிக்கு தங்கம் திட்டத்தையும் செயல்படுத்துவது இல்லை. அதைப் பற்றி எடுத்துரைப்போம்.

பல்வேறு பிரச்சனைகளால் தமிழ்நாடு கொளுந்துவிட்டு எரிகிறது. இப்படியான சூழலில் மக்களை திசைதிருப்பும் வேலையில் திமுக அரசு சனாதனம் பற்றி பேசி வருகிறது. திமுக அரசின் வேதனைகளையும், முந்தைய அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் பணிகளில் ஈடுபடுவோம் என ஆலோசிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் திமுகவை நிரந்தரமாக வனவாசத்திற்கு அனுப்பி இருப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள எந்த சூழலிலும் அதிமுக தயாராக உள்ளது. திமுகவினரை மக்கள் விரட்டி அடிக்கும் நிலைதான் உள்ளது. சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் உதயநிதி பேசுகிறார்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+