Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆழமான கிணற்றை சுத்தப்படுத்தும் போது! ஃபேன் கொண்டு போங்க! விஷவாயு தாக்கி உயிரிழப்பே ஏற்படாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆழம் அதிகம் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் போது 3 முக்கிய விஷயங்களை கடைப்பிடித்தால் விஷவாயு தாக்கி உயிரிழப்பதை தடுக்கலாம்.

இதுகுறித்து Film Food Fun Fact என்ற எக்ஸ் தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ஆழம் அதிகம் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் போது ஆட்கள் ஆக்சிஜன் இல்லாததால், விஷவாயு தாக்கி மூச்சு திணறி இறந்து விடுவதாக செய்தித்தாள்களில் நாம் படிப்பதுண்டு. நம் வீட்டில் அந்த மாதிரி அசம்பாவிதம் நடந்தால் நாமும் தான் பாதிக்கப்படுவோம். கிணறுகளில் இறங்கும் முன்பு கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்.

What are the steps to be taken to clean a well without any mortality

1. முதலில் தீப்பந்தத்தை கயிறு கட்டி இறக்கும் போது ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் இல்லாததனால் அது அணைந்து விடும்.

2. ஒரு ஃபேனை கீழே இறக்கி ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லா இடத்திலும் ஓட விடுங்கள்

3. ஒரு சட்டியில் மெழுகு கொளுத்தி கீழே இறக்குங்கள் அது கடைசி வரை சென்று எரிந்து கொண்டு இருந்தால் ஆக்சிஜன் அங்கு உள்ளது என்று அர்த்தம் பின்பு வேலையை துவங்கலாம். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழம் அதிகம் உள்ள கிணறுகளில் தூர்வார இறங்கும் போதோ அல்லது சுத்தப்படுத்த இறங்கும் போதோ விஷவாயு தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அதாவது 12 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மயிலாடி அருகே கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்கச் சென்ற இருவர் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டனர்.

What are the steps to be taken to clean a well without any mortality

கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் ஒரு சுரங்கத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அது போல் கடந்த ஆண்டு சென்னை ராமாபுரத்தில் கிணற்றில் இறந்து கிடந்த பூனையை எடுக்க கிணற்றுக்குள் இறங்கிய முதியவர் ஒருவர் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டார். அது போல் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அருகே பெருங்குடி உறை கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு பயன்பாட்டில் இல்லாத கிணற்றை தூர்வாரும் போது வெளியான விஷவாயுவை சுவாசித்ததால் வட இந்தியர்கள் 5 பேர் பலியான சம்பவமும் நடந்துள்ளது. இப்படி தொடர்ந்து ஆங்காங்கே கிணற்றில் இறங்கும் போது பலர் உயிரிழக்க நேரிடும் நிலை உள்ளதால் மேற்கொண்ட டெக்னிக்கை பின்பற்றி உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+