ஆழமான கிணற்றை சுத்தப்படுத்தும் போது! ஃபேன் கொண்டு போங்க! விஷவாயு தாக்கி உயிரிழப்பே ஏற்படாது!
சென்னை: ஆழம் அதிகம் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் போது 3 முக்கிய விஷயங்களை கடைப்பிடித்தால் விஷவாயு தாக்கி உயிரிழப்பதை தடுக்கலாம்.
இதுகுறித்து Film Food Fun Fact என்ற எக்ஸ் தள பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ஆழம் அதிகம் உள்ள கிணறுகளை சுத்தப்படுத்தும் போது ஆட்கள் ஆக்சிஜன் இல்லாததால், விஷவாயு தாக்கி மூச்சு திணறி இறந்து விடுவதாக செய்தித்தாள்களில் நாம் படிப்பதுண்டு. நம் வீட்டில் அந்த மாதிரி அசம்பாவிதம் நடந்தால் நாமும் தான் பாதிக்கப்படுவோம். கிணறுகளில் இறங்கும் முன்பு கவனிக்க வேண்டிய, செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள்.

1. முதலில் தீப்பந்தத்தை கயிறு கட்டி இறக்கும் போது ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் இல்லாததனால் அது அணைந்து விடும்.
2. ஒரு ஃபேனை கீழே இறக்கி ஒரு அரை மணி நேரத்திற்கு எல்லா இடத்திலும் ஓட விடுங்கள்
3. ஒரு சட்டியில் மெழுகு கொளுத்தி கீழே இறக்குங்கள் அது கடைசி வரை சென்று எரிந்து கொண்டு இருந்தால் ஆக்சிஜன் அங்கு உள்ளது என்று அர்த்தம் பின்பு வேலையை துவங்கலாம். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழம் அதிகம் உள்ள கிணறுகளில் தூர்வார இறங்கும் போதோ அல்லது சுத்தப்படுத்த இறங்கும் போதோ விஷவாயு தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அதாவது 12 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மயிலாடி அருகே கிணற்றுக்குள் விழுந்த பைக்கை எடுக்கச் சென்ற இருவர் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் ஒரு சுரங்கத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அது போல் கடந்த ஆண்டு சென்னை ராமாபுரத்தில் கிணற்றில் இறந்து கிடந்த பூனையை எடுக்க கிணற்றுக்குள் இறங்கிய முதியவர் ஒருவர் விஷவாயு தாக்கி பலியாகிவிட்டார். அது போல் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை அருகே பெருங்குடி உறை கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு பயன்பாட்டில் இல்லாத கிணற்றை தூர்வாரும் போது வெளியான விஷவாயுவை சுவாசித்ததால் வட இந்தியர்கள் 5 பேர் பலியான சம்பவமும் நடந்துள்ளது. இப்படி தொடர்ந்து ஆங்காங்கே கிணற்றில் இறங்கும் போது பலர் உயிரிழக்க நேரிடும் நிலை உள்ளதால் மேற்கொண்ட டெக்னிக்கை பின்பற்றி உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications