74.. 400.. 500.. அதிமுகவில் 2 பெரிய "தலைகளுக்கு" ஸ்டாலின் குறி! நடக்கட்டுமே.. ஓபிஎஸ் கிரீன் சிக்னல்!
சென்னை: அதிமுகவில் மாஜி அமைச்சர்கள் அடுத்தடுத்து ரெய்டுகளிலும், வழக்குகளிலும் சிக்கி வருகிறாரக்ள். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு அமைச்சர்கள் முறைகேடு வழக்குகளில் சிக்கி உள்ளனர். மாஜி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட பலர் தொடர்ந்து வழக்குகளிலும், ரெய்டுகளிலும் சிக்கி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது.
விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

ரெய்டு
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது. 2016க்கு பின் 27 கோடி ரூபாய் வரை இவர் முறைகேடாக சொத்து சேர்த்து இருக்கிறார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை முடியும் முன் அவர் மீது வேறு வழக்கு போடப்பட்டு உள்ளது.

என்ன வழக்கு
ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன் அவரின் வீட்டில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டது. 13 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரெய்டில் சிக்கி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது

வேலுமணி
இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக 58.23 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் இரண்டாவது முறையும் இவர் மீது ரெய்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் அவர் மீண்டும் ரெய்டுக்கு உட்படுத்தப்பட்டார். 5 மாவட்டங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி பல்புகள் ஆக மாற்றியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது புகார் உள்ளது. சந்தை விலையை விட அதிக விலைக்கு இவர் பல்புகளை வாங்கியதாக புகார் வைக்கப்பட்டு, அது தொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டது.

என்ன சொன்னார்?
மொத்தம் 400 அதிகாரிகள் இவர்கள் இருவரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தினர். எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வம் இதை பற்றி பேசி உள்ளார். அதில், அரசு தன் கடமையைத்தான் செய்கிறது. இதில் தவறு இல்லை. தவறு இல்லை என்றால் அவர்கள் அச்சப்பட வேண்டியது இல்லை. யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோ அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்குத்தான் ரெய்டு நடக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் இந்த ரெய்டை வரவேற்று உள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications