தெரியாது.. தெரியாது! இரவு 12 மணிக்கு நடந்தது என்ன? ஆறுமுகசாமி ரிப்போர்ட்டில் உள்ள ஓபிஎஸ் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த ரிப்போர்ட்ட 600 பக்கங்களுக்கும் மேல் உள்ளது. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கில் -149வது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். அவரது சாட்சியத்தின் போது, எந்த சூழ்நிலையில் மறைந்த முதல்வர் மரணமடைந்தார் என்பதை அறிய அவர் "தர்மயுத்தம்" (நீதிக்கான போராட்டம்) எனப்படும் போராட்டத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டார். மறைந்த முதல்வரின் நினைவிடம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து மறைந்த முதல்வரின் மரணத்திற்கான காரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதையும் அவர் ஒப்புக்கொண்டார். விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை அவர் தான் வைத்தார்.

இயற்கை மரணம்

இயற்கை மரணம்

ஆனால், அவருக்குத் தெரிந்த வரையில், மறைந்த முதல்வரின் மரணம் இயற்கைக்கு மாறானது என்ற சந்தேகம் இல்லை என்று அவர் தனது சாட்சியத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, மறைந்த முதல்வரின் உடல்நிலை குறித்தும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குறித்தும் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நள்ளிரவு 12 மணியளவில் அவர் அதைப் பற்றி அறிந்திருந்தார். ஆனால் மறைந்த முதல்வர் என்ன நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருக்குத் தெரியவில்லை.

12 மணி

12 மணி


அவர் 23.09.2016 அன்று காலை 11.30 மணியளவில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனைக்கு வந்ததும் அவரது உடல்நிலை குறித்து யாரிடமாவது விசாரித்தீர்களா என்ற கேள்விக்கு. தலைமைச் செயலாளரியிடம் கேட்டபோது, மறைந்த முதல்வர் நிலையாக இருந்ததாக தெரிவித்தார் என கூறினார். தொற்று பரவும் என்று கூறி மறைந்த முதல்வரைப் பார்க்க மருத்துவமனை அதிகாரிகள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதால் அவர் மறைந்த முதல்வரைப் பார்க்க முயற்சிக்கவில்லை என்று கூறினார்.

தெரியாது

தெரியாது

சுகாதாரத் துறை அமைச்சர் ஓபிஎஸ்ஸிடம், மறைந்த முதல்வருக்கு நன்முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் நலமாக இருக்கிறார் என்றும் கூறினார். ஆனால் மறைந்த முதல்வரின் உடல் நலக்குறைவு குறித்து ஓபிஎஸ்ஸிடம் குறிப்பாக எதுவும் கூறவில்லை. மறைந்த முதல்வருக்கு இதய பிரச்சனை இருந்தது என்பதை மறைந்த முதல்வர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் மூலம் ஓபிஎஸ் தெரிந்து கொண்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கைந்து நாட்களில் அவருக்கு இதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது என்பதை சி விஜயபாஸ்கர் அறியவில்லை , என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.

விசாரணை

விசாரணை

இந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார். அரசு மருத்துவக் குழுவை நியமித்தது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அரசு மருத்துவர்கள் யாரும் அவருக்கு சிகிச்சை குறித்து தனிப்பட்ட முறையில் தெரிவிக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே டாக்டர் பாபு மனோகரை தெரியும் என்பதால், மறைந்த முதல்வரின் குரல்வளை அறுவை சிகிச்சை (டிரக்கியோஸ்டமி) பற்றி அவரிடம் கூறினார். மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்த சுகாதாரத்துறைச் செயலாளரின் கடிதத்தில், இதய அறுவை சிகிச்சை நிபுணரின் தேவை குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டிருந்ததா என்ற கேள்விக்கு அவர் தெரியாது என்று பதில் அளித்துள்ளார்.

தெரியாது

தெரியாது

எய்ம்ஸ் மருத்துவர்கள் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும், அப்போலோ மருத்துவமனை அளித்து வரும் சிகிச்சையை அவர்கள் தான் மேற்பார்வையிட்டனர் என்றும் அவர் அறியவில்லை. ஜெயலலிதாவிற்கு வெஜிடேஷன் சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது பற்றியும் தனக்கு தெரியாது என்று ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்தார். ஆஞ்சியோ செயல்முறை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் ஓ பன்னீர்செல்வத்திற்கு தெரியவில்லை. மற்றபடி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட பாதிப்பு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார். மேலும் டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஜெயலலிதா மரணம் பற்றி தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.

அறியவில்லை

அறியவில்லை

அதன்பின் சிபிஆர் செய்யப்பட்டது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு உடல்நிலை மோசமான போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை குறித்தும் அப்போது தனக்கு தெரியாது என்றும் ஓ பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். ஜெயலலிதா மரணம் பற்றி மருத்துவமனை சொல்லித்தான் தெரியும். அதில் எனக்கு சந்தேகம் இல்லை என்று ஓபிஎஸ் கூறினார். தர்ம யுத்தத்திற்கு பின்பாகவும் அவர் இதே பதில்களைத்தான் சொன்னார், என்று ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+