உன் கையை காட்டு! கு.க.செல்வத்திடம் உரிமையுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்! அறிவாலயத்தில் நடந்தது என்ன?
சென்னை: பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், இப்போது தான் தனது மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்வதாக முதல்வர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின், செல்வம் உன் கையை காட்டு என உரிமையுடன் கேட்டு அவர் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த உதயசூரியன் சின்னம் அழிக்கப்படாமல் இருந்ததை கண்டு மகிழ்ந்திருக்கிறார்.
வழக்கம் போல் தலைமைக்கழக பணிகளை வந்து கவனிக்குமாறு கு.க.செல்வத்திடம கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.

திமுகவிலிருந்து விலகி
தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான நிலையில், அவரது பதவியிடத்தை குறி வைத்து காய் நகர்த்தி வந்தார் கு.க.செல்வம். ஆனால், உதயநிதி ஸ்டாலினின் சாய்ஸான சிற்றரசுவுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டதும் கோபத்தில் திமுகவை விட்டு வெளியேறி பாஜகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் இணைந்தார். இதனால் முதல் ஓரிரு மாதம் கு.க.செல்வத்துக்கு பாஜகவில் முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவரை கண்டுகொள்ள அங்கு ஆளில்லை.

செல்வம் வருத்தம்
இதனால் தவறான முடிவெடுத்துவிட்டேன் என நினைக்கிறேன் என தனக்கு நெருக்கமான திமுக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் தொலைபேசியில் அண்மைக்காலமாக வருந்தி வந்தார். கு.க.செல்வம் மீண்டும் திமுகவுக்கு வரும் எண்ணத்தில் இருக்கும் தகவலை ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இதையடுத்து அவர் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார் கு.க.செல்வம்.

கேசுவல் சந்திப்பு
மிகவும் கேசுவலாக சால்வை, பூச்செண்டு என ஃபார்மாலிட்டிஸ் எதுவுமின்றி அறிவாலயத்துக்கு வந்த கு.க.செல்வத்தை, அன்பகம் கலை தான் ஸ்டாலின் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, தாய் கழகத்தில் மீண்டும் தன்னை சேர்த்துக்கொண்டதற்கு ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்த கு.க.செல்வம், இப்போது தான் தனது மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின், 'செல்வம் உன் கையை காட்டு பார்க்கலாம்' என உரிமையுடன் கேட்டிருக்கிறார்.

கையில் பச்சை
கு.க.செல்வத்தின் கையில் உதயசூரியன் சின்ன பச்சைக் குத்தப்பட்டிருந்தது அழிக்கப்படாமல் இருந்ததை கண்ட ஸ்டாலின், எதற்கு அவசரப்பட்டாய் என தனக்கே உரிய கண்டிப்புடனும் உரிமையுடனும் செல்வத்திடம் கோபித்திருக்கிறார். மேலும், பழைய நிகழ்வை பற்றி பேசாமல் வழக்கம்போல் கட்சிப்பணிகளில் ஈடுபடுமாறு கூறி அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறார்.
-
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா












Click it and Unblock the Notifications