நிலை தடுமாறிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. திடீரென இடறிய கால்.. பழனி கோயிலில் பரபரப்பு
சென்னை: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கால் இடறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிதியைமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உடையவர். அடிக்கடி கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார், அப்படித்தான் பழனி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றார்.

ரோப் காரில் இருந்து இறங்கியவர் நேராக படிக்கட்டு வழியாக மேலே சென்றார். அப்போது சன்னிதானத்தின் உள்ளே செல்லும் போது அங்கிருந்த மேட் தடுக்கியது. வேஷ்டி சிக்கியதால் கால் தடுமாறியது. இதனால் கீழே விழப்போன அவர் சுதாரித்துக் கொண்டு நடந்தார். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமைச்சர் பிடிஆர் சுவாமியை தரிசனம் செய்தார்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோயிலுக்குள் திடீரென கால் இடறிய காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதனிடையே மதுரையில் நடைபெற உள்ள திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசுவோர் பட்டியலில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராஜன் பெயர் இடம் பெறவில்லை. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான முதல் பட்டியலில் பிடிஆர் பெயர் இடம் பெற்றிருந்தது. இப்போது அவர் பெயர் இடம் பெறவில்லை. இது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications