Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வண்ணாரப்பேட்டை ரேஷன் கடையில் பணியாற்றும் ஜெயந்தி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் விஜயராகவன் தெரு மேம்பாலத்தின் கீழே ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழமையான கட்டிடம் ஆகும். இந்த ரேஷன் கடையில் விற்பனையாளராக ஜெயந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத சம்பவம் நடந்தது. திடீரென ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து ஜெயந்தி மீது விழுந்தது.

சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பல்வேறு கடைகள் வாடகை கட்டிடங்களிலும், பல கடைகள் சொந்த கட்டிடத்திலும் இயங்குகின்றன. இதில் சுமார் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 1000 முதல் 1200 அட்டைகள் வரை உள்ள கடைகள் பல சென்னையில் உள்ளன. சில கடைகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அரசுக்கு சொந்தமான இடங்களில் ஒரே இடத்தில் கூட சில கடைகள் மொத்தமாக அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் இடம் இல்லாததால் வாடகைக்கும் இயங்கும் நிலை தொடர்கிறது.

What happened to Jayanthi who works at a ration shop in Washermanpet Chennai

சென்னை வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் விஜயராகவன் தெரு மேம்பாலத்தின் கீழே ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கட்டிடம் என கூறப்படுகிறது. இந்த ரேஷன் கடையில் விற்பனையாளராக 50 வயதாகும் ஜெயந்தி (வயது என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த ரேஷன் கடையில் 1200 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள், இந்த கட்டிடம் பழமை வாய்ந்ததால் மழை காலங்களில் மழை நீர் கசிவு ஏற்பட்டு கடையில் உள்ள பொருட்கள் சேதம் அடைவதாக புகார்கள் எழுந்து வந்தது எப்போது இடிந்து விழும் என்பது தெரியாமல் ஆபத்தான நிலையில் பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் வந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இவர் நேற்று முன்தினம் மாலை ரேஷன் கடையில் பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்ததுள்ளது. பழமையானகட்டிடம் என்பதால் திடீரென ரேஷன் கடை கட்டிடத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் விற்பனையாளர் ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக ரேஷன் கடை சக ஊழியர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஜெயந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது போன்ற பழமையான கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி அதில் ரேஷன் கடைகளை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+