Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முரசொலிக்கு கட்டுரை எழுத குறிப்புகளை எடுத்த செல்வம்! திடீரென மாரடைப்பு வந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசொலியில் அடுத்த கட்டுரைக்கு குறிப்புகளை எடுத்து வைத்த செல்வம், சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பு வந்து காலமானார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த பிள்ளையுமான முரசொலியின் ஆசிரியராக திகழ்ந்தவர் செல்வம். இவருக்கு வயது 84. இவர் கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரம்மாளின் மகனாவார்.

murasoli selvam dmk karunanidhi

தனது சகோதரியின் மகனையே தனது மகள் செல்விக்கு மணம் முடித்து வைத்தார். செல்வியும் செல்வமும் பெங்களூரில் வசித்து வந்தனர். இவர் முரசொலியின் ஆசிரியராக இருந்ததால் முரசொலி செல்வம் என்றே அழைக்கப்பட்டு வந்தார். பலர் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு ஊன்றுகோலாக இருந்தவர் செல்வம் என்கிறார்கள்.

இன்றும் கூட முரசொலியில் கடைசி பக்கத்தில் இளைஞர்களை எழுத வைத்து அவர்களின் இலக்கியத் திறனை வெளியே கொண்டு வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை செல்வம் மறைந்துவிட்டார் என்ற தகவல் திமுகவினருக்கும் அவரால் வாழ்வில் உயர்ந்த பத்திரிகையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

முரசொலி செல்வம் இன்று காலை முரசொலியில் தான் எழுத வேண்டிய கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்தார். பின்னர் கொஞ்சம் சோர்வாக இருந்ததால் அவரது நாற்காலியிலேயே கண் அயர்ந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த துயரமான செய்தியை கேட்ட முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர். முரசொலி எப்போதும் தான் எழுதிய செய்தியை மறுக்கவே மாட்டாராம். அது போல் அந்த செய்திக்கான சோர்ஸ் எங்கிருந்து வந்தது என்பதையும் சொல்ல மாட்டாராம். அது பத்திரிகை தர்மம் ஆகாது என்ற கொள்கையில் கடைசி வரை இருந்தாராம்.

அவதூறு வழக்கு ஒன்றில் சட்டசபை கூண்டில் ஏற்றப்பட்டாராம். ஒரு பத்திரிகை ஆசிரியர் சட்டசபை கூண்டில் ஏற்றப்பட்டது தமிழக வரலாற்றிலேயே அதுதான் முதல்முறையாம். முரசொலி செல்வம் தனது கட்டுரைகளில் ஆர்.எம்.வீரப்பனை பற்றியே அவதூறு கருத்துகளை கூறியிருந்தாராம். அது போல் அரசின் கொள்கைகள் குறித்தும் சட்டசபையின் அதிகாரம் குறித்தும் முரசொலியில் பல்வேறு கட்டுரைகளை எழுதினாராம்.

இதை எதிர்த்து அவதூறு வழக்கு தொடராத அதிமுக அரசு, அவரை சட்டசபை கூண்டில் ஏற்றியதாம். அப்போது சபாநாயகராக பி.எச். பாண்டியன் இருந்தார். முதல்வராக ஜெயலலிதா அவையில் இருந்தார். அப்போது நடந்த விசாரணையில் தனக்கு சோர்ஸ் கொடுத்தவர்களை காட்டி கொடுக்க முடியாது என மறுத்தார். சட்டசபையில் அவருக்கு எதிராக தீர்மானம் நடைபெற்றது முரசொலி செல்வத்தை கண்டித்ததற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தாய்மாமா கருணாநிதி கொடுத்த பொறுப்பிலிருந்து கடைசி வரை விலகாமல் இறுதி மூச்சின் போதும் முரசொலிக்கு கடைசி கட்டுரையை எழுதியது பலருக்கு மனவேதனையை தந்துள்ளது. பத்திரிகைத் துறை மீது அவருக்கான தீராத காதலையும் இது வெளிப்படுத்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+