செங்கல்பட்டு அருகே மாமியாருக்கு என்ன நடந்தது? சிக்கிய மருமகள்.. மகனையும் சிக்க வைத்த வாக்குமூலம்
செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் வசந்தா தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் இருவருக்கும்இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளைய மகன் வெங்கடேச பெருமாளும்,அவரது மனைவியும் வசந்தாவை தரக்குறைவாக திட்டினார்களாம்.இதனால் வசந்தா எடுத்த முடிவும், அவர் கொடுத்த வாக்குமூலமும் மருமகளையும், மகனையும் சிக்க வைத்துள்ளது.
என்னதான் இன்று பெற்றோர்களை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவர்கள் அதனை போராடி பெறும் நிலை தான் இருக்கிறது. கடைசி காலத்தில் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய பிள்ளைகள்,அவர்கள் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஒதுக்கிவிடுகிறார்கள்.. மாமியார், மருமகள் இடைய ஏற்படும் கோபம், ஈகோவில் சிக்கி கொள்ளும் மகன், கடைசியில் பிள்ளைகளுக்காக மனைவி பக்கமே சாய்ந்து விடுகிறான். இதனால் மனைவி செய்யும் தவறுகள் அவருக்கு தெரிவது இல்லை..

கடைசியில் தாயை ஒதுக்கி வைப்பது, அவதூறாக பேசுவது, மோசமாக நடத்துவது நடக்கிறது. மருமகள் மாமியாரை கொடுமை செய்வதும், மாமியார் மருமகளை கொடுமை செய்வதும் நடக்கிறது. இதில் யாரோ ஒருவர் தான் ஜெயிக்கிறார்கள். இன்னொருவர் கடைசி வரை விட்டுக்கொடுத்து செல்லும் நிலையே இருக்கிறது. உத்திரமேரூர் அருகே நடந்த சம்பவம் பறறி பார்ப்போம்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவரது மனைவி வசந்தா (65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் சங்கர் (47), இளைய மகன் வெங்கடேச பெருமாள் (38). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக வீட்டில் பாகம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் இளைய மகன் வெங்கடேச பெருமாள் காஞ்சிபுரம் அருகே வசித்து வரும் மாமியார் வீட்டுக்கு சென்று வசித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி சங்கரிடம் தாய் வசந்தா வீட்டின் அருகில் உள்ள இடத்தில் இன்னொரு வீடு கட்டலாமே என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கரும், அவரது மனைவி சாந்தி இருவரும் வசந்தாவை தரக்குறைவாக திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தா மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
உடனடியாக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரிடம் செங்கல்பட்டு நடுவர் மன்ற நீதிபதி லாவண்யா வாக்குமூலம் பெற்றார் அப்போது அவரிடம் தன்னை தற்கொலைக்கு தூண்டியது, தனது மகன் சங்கரும் மருமகள் சாந்தியும் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 25 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் பெற்று வந்த வசந்தா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வசந்தாவின் கணவர் ஆறுமுகம் பெருநகர் போலீஸ் நிலையத்தில் தனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து சங்கர் மற்றும் அவரது மனைவி சாந்தி இருவரையும் கைது செய்தனர்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications