அந்த ஒரு சம்பவம்! சீமான் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணி.. சென்னை போலீஸை டார்க்கெட் செய்வது ஏன்?
சென்னை: சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம். இந்த விவகாரத்தில் சென்னை போலீஸை டார்க்கெட் செய்வது ஏன் என்பதை இப்போது பார்ப்போம்.
சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு சென்னை போலீஸ் தான் காரணம் என சிலர் சமூக ஊடகங்களில் தகவல்களை பரப்பிவிட்டனர். இது உண்மையாக இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு அந்த செய்தி வேகமாக பரவியது. இதனிடையே முதல்வர் ஸ்டாலினே சீமான் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்! என்றார்.
இந்த சூழலில் சீமான் கணக்கு முடக்கப்பட்டதற்கு சென்னை மாநகர காவல் ஆணையரை தொடர்புபடுத்தி சிலர் கொளுத்திப் போட்டனர். முதல்வருக்கே தெரியாமல் சீமானின் கணக்கை சென்னை காவல்துறை முடக்கிவிட்டதாகவும் சிலர் தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை போலீசுக்கு எதிராக அடுத்தடுத்து பதிவுகள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் சென்னை காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியது. சீமான் கணக்கு முடக்கத்திற்கு சென்னை போலீஸ் காரணம் என அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சீமானின் கணக்கு முடக்கப்பட்டதற்கு பின்னணி என்ற என்று விசாரித்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது, அவர்களுடைய புகைப்படங்களை வைத்துக்கொள்வது போன்றவை ட்விட்டரில் விதிமீறல்ஆகும். அதன்படியே சீமான், திருமுருகன் காந்தி மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,
அண்மையில் மே18ம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சியை சீமான் நடத்தினார். இதுதொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டிருந்தார். இதன்பிறகே சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே மே 18 நிகழ்ச்சி தொடர்பான படங்களுக்காக ட்விட்டர் அதனை தடை செய்திருக்கலாம் என்கிறார்கள். அதேநேரம் மத்திய அரசின் உத்தரவின் பேரில் தால் தடை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
-
Seeman: வாக்கு சதவிகிதம் முக்கியம் அல்ல.. சீமான் சட்டசபை போகணும்.. இலக்கை மாற்றிய நாம் தமிழர்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications