உதயநிதி சனாதன ஒழிப்பு பேச்சு: 'ஜெகத் கஸ்பர்' அதிரடி சர்வே முடிவு- இப்படியா சொல்றாங்க? அதிரும் திமுக!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசிய சர்ச்சை குறித்து தமிழ் மையத்தின் நிறுவனரும் சமூக செயற்பாட்டாளருமான ஜெகத் கஸ்பர் தமது நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சுதான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை இந்தியா தழுவிய அரசியல் விவாதப் பொருளாக இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், லோக்சபா தேர்தலுக்கான பிரசார ஆயுதமாகவும் 5 மாநில தேர்தல் பிரசார ஆயுதமாகவும் இதனை கையில் எடுத்தனர்.

இதனிடையே டிவி நிகழ்ச்சி ஒன்றில் சமூக செயற்பாட்டாளர் ஜெகத் கஸ்பர் பங்கேற்று பேசுகையில் அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சு குறித்து தமது நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகளை வெளியிட்டு பேசினார். இது தொடர்பாக ஜெகத் கஸ்பர் பேசியதாவது:
57% பேர் உதயநிதிக்கு ஆதரவு- அதிமுக உட்பட: சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது சரி என 57% பேர் சொல்லி இருக்கின்றனர். இப்படி ஆதரவு தெரிவித்தவர்கள் யார் எனவும் ஆய்வு செய்தோம். இவர்களில் அண்ணா திமுகவினரும் இருக்கின்றனர். ஏனென்றால் அவர்களும் திராவிடர் இயக்க பாரம்பரியத்தில் வருகிறவர்கள். 21% பேர் சனாதனம் என்றால் என்ன என்றே தெரியாது என தெரிவித்துள்ளனர். அரசியல் அறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் குறைந்து கொண்டே வருவதையே இது வெளிப்படுத்துகிறது. இது கவலையான ஒன்று.

15% பேர் தவிர்த்திருக்கலாம்: 15% உதயநிதி, சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சை தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளனர். இப்படி தெரிவித்திருப்பது யாரென்று ஆய்வு செய்து பார்த்தால் 'காங்கிரஸ்' கட்சியினரே அதிகம் பேர்.
7% உதயநிதிக்கு எதிர்ப்பு: 7% பேர்தான் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியது தவறு என கூறியுள்ளனர். இப்படியான பேச்சு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளனர்.

இப்படி பேசியிருந்தால் திமுக அவுட்: இதே உதயநிதி ஸ்டாலின், சைவ நெறியை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தால் அடுத்த தேர்தலில் திமுக அவுட். இதில் சந்தேகமே இல்லை. வைணவத்தை, ஆழ்வார்களை, திவ்யபிரபந்த மரபை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தால் திமுக அவுட் அல்லது பாதிப்பை எதிர்கொண்டிருக்கும். ஒருவேளை கருப்பண்ணாசாமியை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கட்டும். கொங்கு நிலத்தில் திமுகவால் ஒரு ஓட்டு வாங்க முடியாது. தென்னகத்தில் அய்யா வைகுண்டர் வழியை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தால் தென்னகம் (தென்மாவட்டம்) முழுவதும் திமுக கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கும். ஆனால் 57% பேர் இன்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியது சரிதான் என்கின்றனர். தேர்தலில் இந்த பேச்சு பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர்.
தென்னிந்திய ஆளுமை உதயநிதி: கூகுள் அனாலிட்டிக்ஸில் சனாதனம் குறித்து எந்த மாநிலம் அதிகமாக தேடியிருக்கிறது எனில் கடந்த ஒரு மாதத்தில் தெலுங்கானா மாநிலம்தான் அதிகமாக தேடி உள்ளது. ஆந்திரா தேடி உள்ளது. கர்நாடகா மாநிலம் தேடி இருக்கிறது. அதாவது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்னிந்தியாவின் ஒரு ஆளுமையாக சனாதன சர்ச்சை மாற்றி இருக்கிறது என்பது இணைய வழி தேடுதல்கள் தெரிவிக்கும் புள்ளி விவரம். இவ்வாறு ஜெகத் கஸ்பர் பேசினார்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications