Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி நிலுவை மட்டும் இத்தனை கோடியா? சரத்குமார், ராதிகா சொத்து மதிப்பை பார்த்தால் ஷாக்.. அம்மாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளனர். அதேபோல் அவரின் கணவர் சரத்குமாரின் சொத்து விவகாரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன. வேட்புமனு தாக்கல் காரணமாக அவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

What is the asset details of Radhika Sarathkumar and Sarathkumar The BJP candidate couple

ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

அதன்படி ராதிகா சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:

அசையும் சொத்து மதிப்புகள்: 27 கோடி ரூபாய்

அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 26 கோடி ரூபாய்

அதன்படி சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:

அசையும் சொத்து மதிப்புகள்: 8 கோடி ரூபாய்

அசையா சொத்து மதிப்புகள் தற்போதைய மதிப்பு: 21 கோடி ரூபாய்

ராதிகா சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 6 கோடி ரூபாய்

இதில் வருமான வரி நிலுவை மட்டும் 3.9 கோடி ரூபாய்

ஜிஎஸ்டி நிலுவை 2.6 கோடி ரூபாய்

சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ( வருமான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) - 8 கோடி ரூபாய்

இதில் வருமான வரி நிலுவை மட்டும் 3.8 கோடி ரூபாய்

ஜிஎஸ்டி நிலுவை 4.4 கோடி ரூபாய்

ராதிகா சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய்

சரத் குமாருக்கு உள்ள கடன் 19 கோடி ரூபாய்

பாஜகவில் இணைந்த சமக: 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைந்துள்ளார் சரத் குமார். அதிமுகவிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பாஜக உடன் கூட்டணி என்று சரத்குமார் அறிவித்த நிலையில், இப்போது கட்சியையே பாஜகவில் இணைத்துள்ளார்.

சரத் குமார் பேச்சு: மனைவியிடம் கேட்டு கட்சியை இணைத்தேன் என்று சரத்குமார் பேசி உள்ளார் . அதில், நள்ளிரவு 2 மணி இருக்கும்... அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் "நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன், என்று கூறி உள்ளார்.

இந்த நிலையில்தான் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத்துள்ளது அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+