Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் சங்கியா.. சமூக நீதி வாதியா? தமிழக வெற்றி கழக கொள்கை இதான்.. க்ளூவை டீகோட் செய்வோமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் கொள்கை என்ன என்ற கேள்வி எழுந்திருக்கும் சூழலில் அதை அவரே பூடகமாக தன்னுடைய அறிக்கையின் மூலமாகவும் முந்தைய பேச்சுக்கள் மூலமாகவும் தெளிவுபடுத்தி இருக்கிறார். அப்படி என்ன கொள்கை விரிவாக பார்ப்போம்.

நடிகர் விஜய் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் "தமிழக வெற்றி கழகம்" என்ற தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த பெயரில் கொள்கை ஏதும் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன. அதே சமயம் அவர் தன்னுடைய அறிக்கையில் இது குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். "தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

What is the ideology of Actor Vijay who announced the name of his political party

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஊழல் இல்லாத நிர்வாகம் என்பது கடமை. அதை கொள்கை என்று வரையறுக்க முடியாது. ஆனால், அந்த அறிக்கையில் மற்றொரு விசயத்தையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுதான்"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்ற சமூக நீதி பேசும் குரளை குறிப்பிட்டு உள்ளார். சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" செய்பவர்களை விமர்சித்து சாதி மத பேதமற்ற ஆட்சியை செய்வேன் என கூறியதன் மூலமாக அவரும் சமூக நீதி கொள்கையையே பிரதிபலிப்பது தெளிவாக தெரிகிறது.

முன்னதாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சினிமா துறையினர் எல்லாம் ஆதரித்தபோது விஜய் மட்டும் எதிர்த்து பேசினார். அதுமட்டுமின்றி நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டுக்கு இரவோடு இரவாக சென்றது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகத்தை மூடிக்கொண்டு பங்கேற்றது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து உதவியது என அதிகார வர்க்கத்தின் பக்கம் நிற்காமல் எளியோரின் பக்கம் நின்று இருக்கிறார்.

கடந்த ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் விஜய். இது போன்ற செயல்களின் மூலம் நடிகர் விஜய் சமூக நீதி கொள்கையை விரும்புபவர் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால், அரசியலில் அதை அமல்படுத்துவதில் கவனம் சிதறாமல், தன்னுடைய கட்சியினருக்கும் சமூக நீதியை போதித்து தெளிவாக நடைபோடுவதை பொறுத்தே அவரது வெற்றியும் தோல்வியும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+