Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய ரிஸ்க்! சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் முன் உள்ள அந்த சவால்! தரையிறக்குவது ஏன் சேலஞ்ச் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென் துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் 2, ரஷ்யாவின் லூனா 25 ஆகிய விண்கலன்கள் சரியாக தரையிறங்க முடியாமல் தோல்வியடைந்த நிலையில், இந்த தோல்விக்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

நிலவு குறித்த கற்பனைகள் மனிதனுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது. கற்காலத்தில் குகைகளில் வசித்தபோது நிலவு, நட்சத்திரங்கள் குறித்து மனிதன் வரைந்து வைத்திருந்தான். இந்த ஆர்வத்திற்கு வடிவம் கொடுக்க நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. பின்னர் ஒருவழியாக 1959ம் ஆண்டு நிலவுக்கு விண்கலனை அனுப்பி ஆய்வு செய்தோம். அதன் பின்னர் மனிதர்களாகிய நாமும் நிலவுக்கு சென்று திரும்பினோம்.

What is the problem with landing rovers on the South Pole of the Moon? Scientists have explained

எல்லாம் சரி ஆனால் தற்போது நிலவுக்கு சென்ற சந்திரயான் 2, லூனா 25 திட்டங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து தோல்வியில் முடிந்துள்ளது என்கிற கேள்வி மேலெழுந்திருக்கிறது. இதற்கு காரணம் இந்த இரண்டு விண்கலன்களும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்றதுதான் என விளக்கமளித்துள்ளனர். தென் துருவத்தில் தரையிறங்குவது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா? என்று கேட்க தோன்றலாம். ஆனால் அதற்கு முன்னர் இந்த பகுதியில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மனிதன் முதன் முதலில் 1969ம் ஆண்டு நிலவில் தரையிறங்கினான். அப்போது இருந்த பாதுகாப்பு அம்சங்கள், தொலை தொடர்பு வசதிகளை விட தற்போது அனைத்து டெக்னாலஜியும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி மிக பிரமாண்டமாக இருக்கிறது. ஆனாலும் ஏன் நம்மால் நிலவின் தென் துருவத்தில் ஒரு ரோவரை கூட வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை? இதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.

"நம்முடைய கம்ப்யூட்டர் டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், நிலவில் தரையிறங்க ராக்கெட் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். 1960ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மனிதர்கள் தயாரித்த ராக்கெட்களின் டெக்னாலஜி வெறும் 10-20 சதவிகிதம் வரைதான் வளர்ச்சி கண்டிருக்கிறது. இதுதான் நிலவில் தரையிறங்குவதில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல். ராக்கெட்களை மார்டனாக மாற்றி பரிசோதிக்க ஏராளமான பணம் செலவாகிறது.

மறுபுறம் நிலவில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. என்னதான் நிலவில் மனிதர்கள் கால் பதித்திருந்தாலும், தற்போதுவரை நிலவின் தென் துருவத்தை பற்றி நமக்கு முழுமையாக தெரியாது. ஒரு சில விஷயங்கள் மட்டுமே தெரியும். இப்படி விஷயம் தெரிந்த இடங்களில்தான் நாம் ரோவரை தரையிறக்க திட்டமிட்டுள்ளோம். கடந்த 2020ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வுப்படி 1 கி.மீ தொடங்கி 8 கி.மீ வரை விட்டம் கொண்ட 1.40 லட்சம் பள்ளங்கள் நிலவில் இருக்கின்றன. இந்த பள்ளங்கள் நம்ப முடியாத அளவு செங்குத்தானவை.

இதில் கற்கள், பாறைகள் ஆகியவையும் இருக்கின்றன. எனவே இங்கு விண்கலன்கள் தரையிறங்க வேண்டிய இடத்தை தீர்மானிப்பதிலேயே பிரச்னை எழுகிறது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் 'போகஸ்லாவ்ஸ்கி' எனும் 95 கி.மீ விட்டம் கொண்ட தென் துருவ பள்ளத்தாக்கில் தரையிறங்க புரோகிராம் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி இறங்க முடியவில்லை. இந்த பள்ளம் பல இடங்களில் 5-10 டிகிரி சரிவாக இருக்கிறது. சில இடங்களில் 45 டிகிரி வரையும் சரிந்து இருக்கிறது.

மட்டுமல்லாது இந்த பள்ளத்தில் 4 சதுர கி.மீ வரை ஆய்வு செய்ததில் 0.5 மீட்டர் முதல் 13 மீட்டர் அளவு வரை 16,000க்கும் அதிகமான கற்பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதெல்லாம் கடந்த 2014ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டாகிவிட்டது. இவ்வளவு டேட்டாக்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மிடம் இருந்தும் கூட நிலவின் தென் துருவத்தில் சரியாக விண்கலத்தை லேண்ட் செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்த தென் பகுதியில் நமக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையில் சந்திரயான் 3 லேண்டரை தரையிறக்குவது கூட சவாலான பணிதான்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+