ஏன் ஆபாசமா நடிச்சே.. சக நடிகர்களின் கிண்டலா? .. ரியாமிகா தற்கொலை பின்னணி என்ன?

நடிகை ரியாமிகா தற்கொலையின் பின்னணி காரணங்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடிகை ரியாமிகாவின் காதலன் கொடுத்த தகவலால் வழக்கில் திருப்பம்-வீடியோ

    சென்னை: "நீ ஆபாசமா நடிச்சே... அதான் உனக்கு பட சான்ஸ் வரவே இல்லை" என்று சக நடிகர்கள் கேலி செய்ததாலேயே நடிகை ரியாமிகா தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நடிகை ரியாமியா ஈரோட்டை சேர்ந்தவர். வயசு 26. சின்ன வயசிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடினார். இதற்காக வளசரவாக்கத்திலேயே ஒரு வீடும் வாடகைக்கு எடுத்து கொண்டார்.

    துணைக்கு அவரது தம்பி பிரகாஷ் இருந்தார். அப்போதுதான் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்', எக்ஸ் வீடியாஸ், அகோரி என்று வரிசையாக பட வாய்ப்புகள் வந்தன. பட வாய்ப்புகள் நிறைய வரவும், டயட், ஜிம் என்று இறங்கினார். அப்படி ஒரு ஜிம்மில் போய் சேர்ந்தபோதுதான், ஜிம் மாஸ்டர் தினேஷ் பழக்கமானார்.

    [ரியாமிகா தற்கொலைக்கு இந்த 3 பிரச்சினைகள்தான் காரணம்?.. போலீஸார் விசாரணை ]

    தூங்க போனார்

    தூங்க போனார்

    புதிதாக பட வாய்ப்பு ஒன்று ரியாமிகாவுக்கு வந்திருக்கிறது. அது சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை சாயங்காலம் வெளியில் கிளம்பி சென்றவர் மறுநாள் காலை 11 மணிக்குத்தான் வீட்டிற்கு திரும்பினாராம். வந்ததும் தூங்க போய்விட்டிருக்கிறார்.

    தூக்கில் தொங்கினார்

    தூக்கில் தொங்கினார்

    புதன்கிழமை சாயங்காலம், தினேஷ் வீட்டுக்கு ரியாமிகாவை தேடி வந்தபோதுதான், தூங்கி கொண்டே இருந்தது தெரியவந்தது. இதன்பிறகுதான் தினேஷூம், பிரகாஷூம் சந்தேகப்பட்டு, பின்பக்க ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கிகொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கேலி செய்தனர்

    கேலி செய்தனர்

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கை ஆரம்பித்துள்ளனர். முதல்கட்டமாக இந்த தற்கொலையில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தான் நடித்த படம் ஒன்றில் ரியாமிகா ஆபாசமாக நடித்திருந்திருக்கிறார். இவ்வளவு ஆபாசமா நடித்தால்தான் படவாய்ப்புகள் எதுவும் உனக்கு வரவில்லை என்று சக நடிகர்கள் கேலி செய்தார்களாம்.

    ஏழ்மையான பின்னணி

    ஏழ்மையான பின்னணி

    அதற்கேற்றபடி, பட வாய்ப்புகளும் வராமல் போகவே ரியாமிகா மனம் நொந்து போய் உள்ளார். போதிய வருமானமும் இல்லை. தம்பி பிரகாஷூக்கும் வேலை இல்லை. பிரகாஷ் சொந்த தம்பி இல்லை. சித்தி மகன்தான். ரியாமிகா வருமானத்தை நம்பிதான் அவரது குடும்பமே உள்ளது.

    உச்சக்கட்ட விரக்தி

    உச்சக்கட்ட விரக்தி

    எங்கே போனாலும் தான் ஆபாசமாக நடித்ததை பற்றியே பேசி கிண்டல் செய்ததால் உச்சக்கட்ட விரக்திக்கு ரியாமிகா சென்றிருக்கலாம் என காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் காதலன் தினேஷிடமும் நிறைய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் வெறும் 6 மாத பழக்கம்தானாம். இருந்தாலும் ரியாமிகா தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை அறிய அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+