இதுதான் "டார்கெட்.." தங்கம் விலை எகிறுதே என்ன காரணம். ! எப்போது குறையும்.. ஆனந்த் சீனிவாசன் பளிச்
சென்னை: அட்சய திருதியை நாளில் நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதையும் நமது டார்கெட் என்னவாக இருக்க வேண்டும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக மெல்லக் குறைந்து வந்த நிலையில், நேற்று அட்சய திருதியை என்பதால் ஒரேயடியாக அதிகரித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை மூன்று முறை உயர்ந்தது. சென்னையில் நேற்று தங்கம் விலை 155 ரூபாய் விலை உயர்ந்து 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ரூ.20 குறைந்து ரூ. 6,750க்கு விற்பனையானது.

இருப்பினும், உள்ளூரில் மட்டுமின்றி உலகளவில் தங்கம் விலை அதிகரித்தது. தங்கம் விலை திடீரென இந்தளவுக்கு அதிகரிக்க அட்சய திருதியை தாண்டி என்ன காரணம்.. வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை: அதாவது தங்கம் விலை நேற்று சர்வதேச அளவிலும் உயர்ந்துள்ளதாம். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கம் வாங்குவதை அதிகரித்தே இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா என்பதை விளக்கிய அவர், அனைத்து குடும்பங்களும் எந்தளவுக்குத் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோவில், "தங்கம் விலை நேற்று அட்சய திருதியை என்பதால் அதிகரித்தது. இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க அட்சய திருதியை காரணம்.. ஆனால், இந்தியாவைத் தாண்டி உலக அளவிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கச் சீனாவில் தங்கம் விற்பனை அதிகரித்தே காரணமாகும். சீன அரசும் கூட கடன் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தங்கத்திற்கு உலகளவில் நல்ல தேவை இருக்கிறது.
முரண்பாடு: இது ஒரு முரண்பாடான நிகழ்வு.. ஏனென்றால் பொதுவாக டாலர் வலுவாக இருந்து அமெரிக்காவில் வட்டி விகிதமும் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையவே வேண்டும். ஆனால், சீனாவில் மக்கள் தங்கத்தை வாங்குவது, சீன அரசு, ரஷ்ய அரசு, துருக்கி அரசு தங்கத்தை அதிகளவில் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கிறது. இந்த நாடுகள் அமெரிக்கக் கடன் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை வாங்குகிறார்கள். இதுவே சர்வதேச அளவில் தங்கம் அதிகரிக்கக் காரணமாகும்.
அமெரிக்க மத்திய வங்கி இந்தாண்டு இறுதியில் தான் வட்டி விகிதத்தைக் குறைக்கும். இந்தாண்டு அதிகபட்சமாக ஓரிரு முறை மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள். இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. அடுத்த ஆண்டு தான் வட்டி விகிதத்தைக் கணிசமாகக் குறைப்பார்கள். அப்போது தங்கம் விலை அதிகரிக்கும்.
புதிய டார்கெட்: ரூபாய் மதிப்பும் அழுத்தத்தில் இருக்கும். இதனால் தங்கம் நல்ல ஒரு சொத்தாக இருக்கும். உங்களிடம் 200 கிராம் தங்கம் இல்லை என்றால் உடனே அதை வாங்குங்கள். நான் முதலில் குறைந்தது 400 கிராம் தங்கம் வேண்டும் என்றேன். ஆனால், அப்போது தங்கம் விலை 3000 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது அது 7000 ரூபாய் அருகே சென்றுவிட்டது. இதனால் தான் டார்கெட்டை பாதியாகக் குறைத்துள்ளேன்.
எப்படடி வாங்கலாம்: தங்கத்தை ஆபரணமாகவோ அல்லது நகையாகவோ தான் வாங்க வேண்டும் என்று இல்லை கோல்ட் பீஸ் ஆக கூட வாங்கலாம். அதைத் தேவைப்படும் போதும் விற்றும் கொள்ளலாம்" என்று அவர் தெரிவித்தார்..
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications