கருணாநிதி சிலை திறப்பு விழா.. முதலில் நோ சொல்லிவிட்டு பிறகு டபுள் ஓகே சொன்ன ராகுல்.. பரபர பின்னணி!
Recommended Video

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலில் பங்கேற்க இயலாது என சொல்லிவிட்டு பிறகு பங்கேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்படும் என திமுக அறிவித்தது. இதையடுத்து அந்த விழா இன்று நடைபெற்றது. இந்த சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தேசிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே கருதப்பட்டது.

சந்தேகம்
இந்த நிலையில் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வீரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் முதலில் கலந்து கொள்ளமாட்டேன் என கூறயிருந்தார். இதனால் அவரது வருகை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

முரண்பாடு
இந்நிலையில் ராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் பிரச்சினை இருப்பதால்தான் ராகுல் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என செய்திகள் உலவத் தொடங்கின. இதையடுத்து சோனியாவுடன் தானும் கலந்து கொள்வதாக ராகுல் அறிவித்தார்.

திமுக விழாவில்
இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் கேட்ட போது 5 மாநில தேர்தல் வெற்றியால் ராகுல் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதனால் கூட்டணியின் முக்கிய கட்சியான திமுகவின் விழாவில் கலந்து கொள்வது என முடிவு செய்தார்.

உத்வேகம்
அது மட்டுமல்லாது திமுக விழாவில் ராகுல் பெரிதும் ஆர்வம் காட்டி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே 5 மாநில தேர்தல் வெற்றி ராகுல் காந்திக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications