ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் பற்றி அறிவிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை பற்றி அறிவிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமைக்கு உள்ளாகி, இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வந்தது.
இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.

தமிழக அரசின் குழு
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவை தமிழகா அரசு உருவாக்கியது. அதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆளுநர் ஒப்புதல்
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை முழுமையாக தடை செய்துள்ளார்கள். இதனை பாமக முழுமையாக வரவேற்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஏன் 4 நாட்களாக வெளியிடவில்லை?
இதற்கு காரணம் பல லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் அக்.1ம் தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். தொடர்ந்து 3ம் தேதி அரசிதழில் சட்டம் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சட்டம் பற்றி 4 நாட்களாக ஏன் வெளியிடவில்லை என்று புரியவில்லை. இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாராவது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications