குட்கா, பான் மசாலா தடை உத்தரவு ரத்து.. தமிழக அரசின் அடுத்த திட்டம் என்ன! அமைச்சர் மா.சு பரபர
குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், இது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களால் பல லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். குறிப்பாகப் புகையிலையை எடுத்துக் கொள்வதால் கேன்சர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இதன் காரணமாகவே இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்தவும் இங்குத் தடை உள்ளன.

குட்கா தடை
இருப்பினும், புகையிலை பொருட்களின் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்துக் கடந்த 2006இல் உத்தரவிடப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

நீதிமன்றம்
ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சமீபத்தில் தான் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகக் குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீக்கம்
மேலும், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை சட்டத்தில் அதன் விளம்பரங்களுக்கு மட்டுமே தடை இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் தமிழகத்தில் கிடைக்கும் சூழல் உருவானது. இதனிடையே இது தொடர்பான கேள்விக்குச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 3.65 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட தொற்று நோய் சிகிச்சைக்கான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, தலா ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.46.50 கோடி மதிப்பில் தரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டுமான பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அடுத்தகட்ட திட்டம்
இது தொடர்பாகச் செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.. கொரோனாவுக்கு பிறகு இப்போது மாரடைப்புகள் அதிகரித்துள்ளது. அனைவரும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றால்.. அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications