என்னங்க இது.. கீழ்த்தரமா இல்லையா? சட்டென சீறிய பிரேமலதா.. எடப்பாடியா? இது லிஸ்ட்லயே இல்லையே!
நீண்ட காலத்திற்கு பின் தேமுதிக தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வகைக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விமான பயணி ஒருவரை தாக்கிய வழக்கு மட்டுமின்றி செல்போன் திருட்டு வழக்கும் அவர் மீது போடப்பட்டு உள்ளது. கடந்த 11-ந் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு அவர் விமானம் மூலம் வந்தார்.
அப்போது அவர் பேருந்தில் ஹேங்கரில் இருந்து திரும்பி செல்கையில், உடன் வந்த அமமுக நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ எடுத்தார்.

வழக்கு
அதிமுகவை அழித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றஞ்சாட்டி அவர் வீடியோ எடுத்தார். ,அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியை சேர்ந்த ராஜேஸ்வரன் இப்படி நடந்து கொண்டதை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரை எடப்பாடி சமாதானம் செய்ய முயன்றும் சமாதானம் ஆகவில்லை. இதை செல்போன் மூலம் வீடியோ எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எடப்பாடி பாதுகாலவர் ராஜேஸ்வரனை தாக்கினார். அதோடு அவரின் செல்போனையும் பறித்தார். இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. அதோடு விமான பயணியை தாக்கிய வழக்கு மட்டுமின்றி செல்போன் திருட்டு வழக்கும் அவர் மீது போடப்பட்டு உள்ளது.

பிரேமலதா
இதை பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை. அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் போதை பொருட்கள் விநியோகம் அதிகரித்து உள்ளது. மாணவர்கள் அதிக அளவில் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டு உள்ளனர். என்ன கொடுமை இது. முன்னாள் முதல்வர் மீது இப்படியா வழக்கு போடுவார்கள்.

தேமுதிக
இந்த அரசு ஏன் இப்படி இருக்கிறது. இந்த அரசு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் இந்த சம்பவம்தான். இவர்கள் வழக்கு போட நினைத்து இருந்தால் வேறு விஷயங்களில் போட்டு இருக்கலாம். பல விஷயங்கள் சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் எல்லாம் வழக்கு போடாமல் இவர்கள் ஏன் செல்போன் திருட்டு வழக்கை போடுகிறார்கள். இது மிக மோசமான செயல் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏன் இப்படி?
அதிமுகவை கடந்த சில நாட்களாக ஆதரிக்காமல் விமர்சனம் செய்து வந்த பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக இப்படி திடீரென அரசை விமர்சனம் செய்து, அதிமுகவிற்கு ஆதரவாக பேசி உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. எங்கே அதிமுகவுடன் நெருங்க இவர் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இவர்கள் கூட்டணி வைக்கவில்லை. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இவர்கள் நெருங்கி வருகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications