அப்பவே என்கிட்ட சொன்னாங்க.. ஜனவரியில் நடந்தது என்ன? மீனாவின் கணவர் பற்றி ராதாகிருஷ்ணன் பேட்டி!
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம் பற்றி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு மரணம் அடைந்தார். இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சமீபத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இவரின் இரண்டு நுரையீரலும் சமீபத்தில் செயல் இழக்கும் நிலைக்கு சென்றது.

பெங்களூர்
அப்போது இரண்டு நுரையீரலுக்கும் மாற்று தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இதையடுத்து இவருக்கு மாற்று நுரையீரல் ஏற்பாடு மீனாவின் குடும்பம் காத்து இருந்தது. ஆனால் டோனர் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதற்கு இடையில் அவரின் உடல் நலிவடைந்த நிலையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூரை சேர்ந்தவர்.இவரின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போது கூட்டுறவுத்துறை செயலாளராக இருப்பவருமான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். இவர் பெங்களூரை பூர்வமாக கொண்டவர். மீனாவின் கணவர் வித்யாசாகரின் குடும்பமும் பெங்களூரை சேர்ந்தது. மீனாவின் குடும்பமும், ராதாகிருஷ்ணன் குடும்பமும் நட்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மீனாவின் கணவர் மரணம் பற்றி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்க கூடிய நபர் நடிகை மீனா.

சிகிச்சை
அவரின் கணவர் இயற்கை எய்திவிட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். நான் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த போது கூட, தனது கணவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மீனா கூறி வந்தார். தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் கூறி வந்தார். அவரின் கணவருக்கு ஜனவரியில் இருந்தே உடல்நிலை பாதிப்பு கூடுதலாக இருந்தது. ஜனவரியில் உடல்நிலை மோசமாக தொடங்கியது.

ஷாக்கிங் செய்தி
எதிர்பாராமல் நேற்று ஷாக்கிங்காக அவர் இறந்துவிட்டார். இது மிகவும் வருத்தமான செய்தி. மிகவும் ஷாக்கிங்கான செய்தி என்றுதான் கூறவேண்டும். பெசன்ட் நகரில் 2.30 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு என்ன உதவி வேண்டுமோ அதை மாநகராட்சி மூலம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications