உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.க்கு கல்விக்கடன் கொடுக்க மறுத்த வங்கி! சலசலப்புக்கு அஞ்சாத போர்க்குணம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் பேசு பொருளாகி உள்ளார்.
சப் கலெக்டராக பயிற்சியை தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை யாருக்கும் அஞ்சாத ஐ.ஏ.எஸ். ஆபிசராக வலம் வரும் இவர், சலசலப்புகளை கண்டு எதற்கும் பின் வாங்காதவர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியிலேயே கறார் பேர்வழி என்று பெயரெடுத்த உதயச்சந்திரன் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்திலிருந்து படித்து முன்னேறியவர்.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த இவருக்கு கல்விக்கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அனுகுகிறார். ஆனால் அவருக்கு கல்விக்கடன் கொடுக்க முடியாது எனக் கூறி வங்கி மேலாளர் திருப்பி அனுப்பிவிடுகிறார்.
வங்கியில் கல்விக்கடன் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டவர் என்பதால் அதன் வேதனையும், வலியும், உதயச்சந்திரனுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் என்னவோ ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒரே மாதத்தில் 8,000 பேருக்கு கல்விக்கடன் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
அதேபோல் தன்னை எந்தப் பதவிக்கு அரசு மாற்றினாலும் அந்தப் பணியை செவ்வனே செய்யக்கூடியவர். இப்போது கூட நிதித்துறைக்கு இவர் மாற்றப்பட்டிருக்கிறார் என்றால், ஏற்கனவே அமைச்சர் தங்கம் தென்னரசுவோடு இணைந்து பணியாற்றி இருக்கக் கூடியவர்.
தொல்லியல் துறையாக இருந்தாலும் சரி முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்தாலும் சரி தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பார்க்கக் கூடியவர்.

தங்கம் தென்னரசுவுடன் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.க்கு நன்கு பரிச்சயம் இருப்பதால் அவர்கள் இருவருக்கும் இடையே நிர்வாக விவகாரத்தில் எந்த சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications