ஹப்பாடா.. ஒருவழியாக அந்த குட் நியூஸை சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்.. வானிலையில் மாற்றம்.. இன்று நிம்மதி
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்திக்கொண்டு இருந்த நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. முக்கியமாக சென்னையில் சகிக்க முடியாத அளவிற்கு வெப்பநிலை நிலவியது.
கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.
மாறாக, தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
நேற்றுதான் வெப்பத்தில் இருந்து கொஞ்சம் விடிவு கிடைத்து சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் தற்போது திடீரென மழை பெய்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்திக்கொண்டு இருந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். அதில், ஆந்திராவில் இருந்து இன்று காலை வந்த காலை மழை மேகங்கள் கடலுக்குள் சென்ற விட்டன. இந்த மேகங்கள் வட தமிழகத்தின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்.
அதாவது வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், பாண்டி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வெயில் 40 டிகிரிக்கு மேல் தொடர்ந்து நிலவி வந்த நிலையில்தான் அவர் இந்த நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications