Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறைக்கு சக்ஸஸ்.. முழு "கண்ட்ரோலில்" வந்த செந்தில் பாலாஜி.. அடுத்த 5 நாள் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் செந்தில் பாலாஜி வந்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.

What will happen in the next 5 days as Enforcement Directorate got custody of Senthil Balaji?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக உயர் நீதிமன்றம் இதேபோல 8 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறை காவலில் அவரை எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் இருந்த நாட்களை விசாரணை நாட்களாக கருத கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உள்ளது.

விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், என்று இன்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்துள்ளார். அதன்படி வரும் 12ம் தேதி வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை கோரிக்கை: இந்த வழக்கில் அமலாக்கத்துறை தொடக்கத்தில் இருந்தே செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை முயன்று வந்தது. அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில், இந்த வழக்கு பற்றி பேசும் முன் முக்கியமான ஒரு சர்வதேச விதி பற்றி நான் பேச வேண்டும். 2000ம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுக்க பல நாடுகள் மணி லாண்டரி குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன.

இதை தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்தன. ஐநா மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன. அதை மனதில் வைத்தே இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அதோடு ஐநா நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் கூட உருவாக்கியது. அதில் 40 விதிகளை கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே, வெள்ளை என்று தரம் பிரித்தது. பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்டில் உள்ளது.

விரைவில் கருப்பு லிஸ்டிற்கு சென்றுவிடும். ஆனால் நாம் விதிகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த லிஸ்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன. நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால் அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் என்னால் அவரை விசாரிக்க முடியும், ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை எப்படி போட முடியும். ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார்.

நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர். மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, ​​அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முகாந்திரம் எங்கே உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசார்ணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர். மருத்துவமனை மாற்றம் தொடர்பாக இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பித்தபோது ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென கேட்கவில்லை, என்று அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்தார்.

What will happen in the next 5 days as Enforcement Directorate got custody of Senthil Balaji?

அனுமதி: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜி கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற காவலில் கொண்டு செல்லப்பட்டு விட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செந்தில் பாலாஜியை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் முழு கட்டுப்பாட்டிற்குள் செந்தில் பாலாஜி வந்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் இனி அமலாக்கத்துறை என்ன வேண்டுமானாலும் விசாரிக்கலாம். அவரின் உணவு தொடங்கி தூங்கும் நேரம் வரை அனைத்தையும் அமலாக்கத்துறையே முடிவு செய்யும். அவரிடம் பல ஆயிரம் கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+