முடங்கிய சமூக வலைதளங்கள்.. உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பயனாளர்கள் அவதி
சென்னை: உலகம் முழுவதும் திடீரென்று வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் முடங்கி உள்ளன. இதனால் பயனாளர்கள் அவதியடைந்தனர்.
நாம் அனைவரும் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தி வருகிறோம். தற்போது ஒருவரையொருவர் இந்த செயலிகள் வழியாக தான் அதிகமாக நாம் தொடர்பு கொண்டு வருகிறது.
குறிப்பாக கூற வேண்டும் என்றால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்கள் முக்கியமானதாகும். நம்மில் பலரும் இந்த செயலிகளை தான் பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் தான் இன்று இரவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள் திடீரென்று முடங்கி உள்ளன. இதனால் பல பயனாளர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது பேஸ்புக்கை எடுத்து கொண்டால் உள்ளே நுழைவதில் பயனாளர்கள் சிரமப்பட்டனர். மேலும் போட்டோ, வீடியோ போஸ்ட் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமை பொறுத்தவரை போஸ்ட்டை அப்டேட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் வாட்ஸ்அப்பிலும் போட்டோ, வீடியோ அனுப்புவதில் பலரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், #Instagramdown என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டிங் ஆனது.
இந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட 3 சமூக வலைதளங்களும் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனையால் மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் நள்ளிரவு 12.18 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தொழில்நுட்ப பிரச்சனையால் சில பயனாளர்கள் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர். இதுபற்றி நாங்கள் அறிந்துள்ளோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பில் இப்படி பொதுமக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் சந்தித்து இருக்கின்றனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் பிரச்சனை என்பது சரிசெய்யப்பட்டு மீண்டும் செயலிகள் வழக்கம்போல் செயல்படும். இதனால் தற்போதைய பிரச்சனையும் விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என்பதால் பயனாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
-
ரூ.160 லட்சம் கோடி.. உலகப் பொருளாதாரத்தின் 'இதயத் துடிப்பை' நிறுத்திய ஈரான்.. அராம்கோ மீதே அட்டாக்! -
மகளிர் உரிமை தொகை.. இந்த மாதம் வராது.. ஆனால் தேடி வரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு -
Samson: சொந்த கேப்டன், பயிற்சியாளரால் ஏற்பட்ட அவமானம்.. காத்திருந்து கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
சங்கீதா கொடுத்த விவாகரத்து வழக்கு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த மகன் ஜோசன்.. புது பஞ்சாயத்து -
திமுக விஸ்வரூபம் எடுத்துவிட்டது.. அதிமுக தலைவர்களை இணைப்பதன் பின்னணி இதுதான்.. பத்திரிகையாளர் மணி! -
1 ராஜ்ய சபா, 23 தொகுதிகள்.. காங்கிரஸ்க்கு மார்ச் 3 வரை கெடு.. தொகுதி பங்கீடு பேச்சில் நடந்தது என்ன? -
அப்போ விரிசல் உண்மைதான் போல.. மோடி கூட விஷ் பண்ணிட்டாரே.. ஸ்டாலினை தாமதாக வாழ்த்திய ராகுல் -
டேஞ்சர்.. சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான்.. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? -
எடப்பாடி எதுக்குத் தான் இருக்காரு.. அதிமுகவை அண்டர் கண்ட்ரோலில் எடுத்த அமித் ஷா! குமுறும் ர.ர.க்கள்! -
சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications