பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்... ஜனவரி 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டம்..?
சென்னை: தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இதற்கான முன்னேற்பாடுகளை சட்டசபை செயலகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த முறை நடைபெற்றதை போல் கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறுமா அல்லது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே கூட்டம் நடக்குமா என்ற விவரம் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து இரண்டு முக்கிய முடிவுகள்.. வாபஸ் பெற்ற தமிழக அரசு.. என்ன காரணம்!
ஜனவரி 2-வது வாரம்
2021-ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பதால் சட்டசபை கூடுவதற்கான தேதி கோரி சட்டசபை செயலகம் தரப்பிலிருந்து அதற்கான கோப்புகள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முக்கிய அறிவிப்புகள்
வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் சட்டசபை முடிவுக்கு வரவுள்ளதால் ஆளுநர் உரை மற்றும் அதற்கு பிறகு நடைபெறும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஏராளமான சலுகைகளும், அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த இரண்டு கூட்டத்தொடர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியதாக இருக்கிறது.
ஆளுநர் உரை
ஆளுநர் உரை மற்றும் அறிவிப்புகள் பற்றி விவாதிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எங்கே கூட்டம்?
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை கூட்டத்தை நடத்துவதா இல்லை கடந்த முறை போல் கலைவாணர் அரங்கத்தில் வைத்து கூட்டத்தை நடத்துவதா என்பது பற்றி சட்டசபை செயலகம் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்த முடிவை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.