குரூப் 4 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்.. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இளைஞர்களே கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 244 காலியிடங்களை நிரப்பக் கடந்த ஜூன் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியான பிறகே கட் ஆப் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு அரசுப் பணிகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தான் நிரப்பி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல வகை தேர்வுகள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் இந்த போட்டித் தேர்வுக்குத் தயாராவது வழக்கம். குறிப்பாக குரூப் 4 தேர்வுகளைப் பலரும் எழுதுவார்கள்.
குரூப் 4 தேர்வுகள்: கடந்த ஜனவரி 30ம் தேதி இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.. பிப். 28ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவசாகம் அளிக்கப்பட்டது. இந்தாண்டு மொத்தம் 6,244 காலியிடங்களை நிரப்பத் தேர்வுகள் நடத்தப்பட்டன. விஏஓ, வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். குரூப் 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என்பதால் டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்கள் மட்டுமின்றி பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. இதில் பல லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
எப்போது: குரூப் 4 தேர்வு நடந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கிடையே இது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபரில் எந்த தேதியில் தேர்வு முடிவு வெளியாகும் என்பது அறிவிக்கப்படவில்லை. எந்த தேதியில் வெளியாகும் என்பது குறித்து சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
தேர்வு முடிவு வெளியான பிறகே கட் ஆப் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும். குரூப் 4 தேர்வு எழுதிய பல லட்சம் மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து ஆர்வமாக இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எழுத்து தேர்வு: குரூப் 4ஐ பொறுத்தவரை இதில் நேர்முகத் தேர்வு இருக்காது.. எழுத்துத் தேர்வு மட்டுமே இருக்கும். எழுத்துத் தேர்வில் கட் ஆப் மார்க் அடிப்படையில் வேலை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுத இதுவே காரணமாகும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கூட அதற்கு முன்பு பயிற்சியாக குரூப் 4 தேர்வை எழுதுவதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications