எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்ச்சியடையாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு எப்போது?
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் 9.97 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இதில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு மூலம் தேர்ச்சி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 97% தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பல வருடங்களாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

மே 2-ம் தேதி பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2 முதல் நான்காம் தேதி வரை மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும்பங்கேற்காத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில், சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications