18+.. திருச்சி சாதனாவின் கொப்பளிக்கும் ஆபாசங்கள்.. இப்படியா குளிப்பது?.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்
திருச்சி சாதனா யூடியூப் சேனலை முடக்க கோரிக்கை கிளம்பி உள்ளது
சென்னை: ஆபாச வீடியோக்களை வெளியிட்டும், பேசியும் வரும் திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்று கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
டிக்டாக் தொடக்கத்தில், ரவுடிபேபி சூர்யா, திவ்யாவுக்கு அடுத்தபடியாக, மக்களிடம் பிரபலமானவர் திருச்சி சாதனா.
சாதாரண கிராமத்து பெண்ணிடம் இவ்வளவு நடிப்புத்திறமை உள்ளதா? இந்த அளவுக்கு டான்ஸ் ஆடுவாரா? பாடுவாரா? என்று பலரையும் வியக்க வைத்தவர் சாதனா..!

யூடியூப் சேனல்
ஆனால், டிக்டாக் முடக்கத்திற்கு பிறகு, தனியாகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல வீடியோக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்... இதற்கு கிட்டத்தட்ட 192 k சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள்.. அன்றாடம் தான் செய்யும் வேலைகள், உட்பட அனைத்தையுமே வீடியோவாக இவர் பதிவிட்டு வருகிறார்... அதேசமயம், சாதனாவின் சில வீடியோக்கள் எல்லைமீறி இருப்பதாகவும், புகார்களும் சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன.

குளிக்கும் வீடியோ
சில நாட்களுக்கு முன்பு, காட்டுவாசியாக காட்டுக்குள் செய்த சேட்டைகள் அத்தனையும் பேசுபொருளானது.. பிறகு, கால்வாயில் குளித்து முடித்த வீடியோ வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. அதைவிட, தன்னுடைய வீட்டில் அறைக்கதவை மூடிவிட்டு, செல்போனை ஆன் செய்து, பப்ளிக் பார்க்கும்படியாக, சேலை மாற்றியதை கண்டு நெட்டிசன்கள் கொந்தளித்து போனார்கள்.. அந்தவகையில், சமீபகாலமாகவே சில வீடியோக்கள் எல்லைமீறி கொண்டிருப்பதாகவும், ஆபாசங்கள் அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் மனம் வெதும்பி சொல்கிறார்கள்.

குளிக்கும் திருச்சி சாதனா
மேலும் ஆபாச சைகைகளை காட்டி 18+ வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை, சைபர் கிரைமும் வேடிக்கை பார்த்து வருவதாக தற்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது... அதிலும் சமீபத்தில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டு பலரது எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறார் சாதனா.. எப்படி குளிக்க வேண்டும் என்ற தலைப்பில், ஆடையுடன் குளிக்கிறார்.. பலரும் அதில் திட்டி திட்டி கமெண்ட்களை பதிவிட்டும், கண்டனம் சொல்லியும், அந்த வீடியோவை அவர் வீடியோ டெலிட் செய்யப்படவில்லை என்றும் புகார்கள் வெடித்து கிளம்பி உள்ளன..

திவ்யா, சுகந்தி
ஏற்கனவே, மக்களின் மன நிலைமையும் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் ஆபாசம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வீடியோ வெளியிடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார்கள் தரப்பட்டிருந்த நிலையில்தான், ரவுடி பேபி சூர்யா, சிக்கா, திவ்யா, சுகந்தி என பலரும் கைதாகி விட்டனர்.. இப்போது திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை தேவை என்ற குரல்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. !












Click it and Unblock the Notifications