Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி.. வருது ஸ்பெஷலான அறிவிப்பு.. கோவை டூ சென்னை.. அதென்ன யாத்ரி சேவா அனுபந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதாரண் வந்தே பாரத் ரயில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வரும்நிலையில், "யாத்ரி சேவா அனுபந்த்" என்ற திட்டம் அறிமுகமாகி உள்ளது.. இந்த திட்டமானது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

வந்தே பாரத் ரயில் பொதுமக்களின் அபார ஆதரவை பெற்று வருவதையடுத்து, ரயில்வேயின் அடுத்தடுத்த விரிவாக்கம் நடந்து வருகிறது.. அந்தவகையில், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

When will Vande Bharat Sadharan Train start in Tamil Nadu and Do you know what is the Special yatri seva anubhav

வந்தே பாரத்: கடந்த ஆகஸ்ட்டில் இதற்கான பணிகள் துவங்கியது.. மேற்கு வங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் தொழிற்சாலையில், இதற்கான இன்ஜின்களும் தயாரிக்கப்பட்டன. நாடு முழுவதும் இந்த ரயிலை இயக்கப்போவதாக கூறப்படும்நிலையில், வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

மேலும், முதல் ரயில் தற்போது தயாராகி உள்ள நிலையில், அதற்கு முன்பாக, உத்தரபிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள ஆர்டிஎஸ்ஓ எனப்படும், ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துவிடும் நிலையில், இந்த ரயிலை அறிமுகப்படுத்த, ரயில்வே திட்டமிட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

அனுபவங்கள்: இந்நிலையில், இன்னொரு ஸ்பெஷல் அறிவிப்பு வந்துள்ளது.. அதாவது, வந்தே பாரத் ரயில்களின் உயர் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும், பயணியரின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், "யாத்ரி சேவா அனுபந்த்" என்ற திட்டம் தற்போது புதிதாக அறிமுகமாகிறது.

இதன்படி, ரயில் பெட்டிகள் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது.. முக்கியமாக, உணவு மற்றும் குளிர்பான சேவைக்கு, தனி கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்களாம்.. ரயில் பயணியர் ரயில் நிலையம் வருவதற்கும், அங்கிருந்து செல்வதற்கும் டாக்சி சேவை வழங்குதல், க்யூ.ஆர் கோடு மூலம், உணவின் தரத்துக்கு மதிப்பீடு வழங்குதல் போன்ற சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகிழ்ச்சி தகவல்: இந்த புதிய திட்டம் குறித்து, ரயில்வே முன்பதிவு மைய அதிகாரிகள் சொல்லும்போது, "கூடுதல் கட்டணம் செலுத்தி, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர் கூடுதல் சேவைகளை எதிர்பார்க்கிறார்கள்..

அதனால்தான், கோவை - சென்னை உள்ளிட்ட வந்தே பாரத் ரயில்களில், பயணிகளின் வசதிக்காகவே, இனிவரும் நாட்களில் கூடுதல் சேவைகள் கொண்டு வருவதற்காக புதிய திட்டங்கள் அறிமுகமாக உள்ளன" என்ற மகிழ்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+