Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஈசிஆர்-ஓஎம்ஆர் இடையே 3 பாலங்கள் வருகிறது.. எங்கு எல்லாம்.. ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையான ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.. அதற்கு அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை என்பது வானுயர்ந்த கட்டிங்கள், மிகப்பெரிய விஐபி வீடுகள், புதுச்சேரி, மகாபலிபுரம் பிரதான சாலையாக உள்ளன. ஆனால் ஈசிஆர்-ஓஎம்ஆர் இடையே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இதன் காரணமாக பாலம் வழியாக மட்டுமே இணையக்கூடிய நிலை இருக்கிறது. இந்நிலையில் இங்கு ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்துவிட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையிலிருந்து புதுச்சேரி மற்றும் மகாபலிபுரம் செல்ல கிழக்கு கடற்கரை சாலை (ECR), பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவை முக்கிய சாலைகள் ஆகும். இதில் கிழக்கு கடற்கரை சாலை என்பது விஐபிக்கள் மற்றும் விடுதிகள் அதிகம் நிறைந்த சுற்றுலா தலங்கள் நிறைந்த இடமாக உள்ளது.

Where are the 3 bridges between ECR and OMR roads in Chennai located good news

அதேநேரம் ஓஎம்ஆர் சாலையான பழைய மகாபலிபுரம் சாலையை பொறுத்தவரை, ஏராளமான அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இரு சாலைகளுக்கும் நடுவில் தான் பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இவ்விரு சாலைகளும் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும்.

ஆனால் இச்சாலைகளின் குறுக்கே போதிய பாலங்கள் இன்று வரை கிடையாது. ஒன்று திருவான்மியூரில் நுழைய வேண்டும்.. இல்லை என்றால் 7 கிமீ தூரம் தள்ளி சென்று சோழிங்கநல்லூரில் பாலத்தை கடக்க வேண்டும். அது இல்லாவிட்டால் திருப்போரூர் அருகே செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை.. இதனால் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு பல கிமீ சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இன்று வரை தொடர்கிறது.

மக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய வகையில் ஆங்காங்கே சில பழைய பாலங்கள் உள்ளன. ஆனால் ஏற்கெனவே உள்ள பாலங்கள் பழுதடைந்த நிலையில் தான் இருக்கின்றன. பழுதடைந்த 3 பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கான டெண்டரும் கோரியிருக்கிறது

இதன்படி, பெருங்குடி மண்டலம், 181-வது வார்டு, பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வெங்கடேசபுரம்- இளங்கோ நகர் பகுதியில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.65 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதேபோல் பெருங்குடி மண்டலம், 182 மற்றும் 183-வது வார்டுகளில், பாலவாக்கம் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் காமராஜர் சாலை- வீரமணி சாலையில் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.62 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி சோழிங்கநல்லூர் மண்டலம், 192, மற்றும் 193-வது வார்டுகளில், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்- ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் துரைப்பாக்கம் பாண்டியன் தெரு- அண்ணாநகர் பகுதியில் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.60 கோடியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 பாலங்களும் மொத்தம் ரூ.16.87 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் பள்ளிக்கரணை சந்திப்பான பெருங்குடியில் பெரிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை ரெடியானால் ஐடி ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பணிகளும் தற்போது நடந்து வருகின்றன .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+