தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்களை தட்டிப் பறித்த அமெரிக்கா
சென்னை: தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு உத்தரவை இன்னும் இரு வாரங்களுக்கு அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

தலைமை செயலாளர் சண்முகம்
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவர் கூறுகையில் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை அனைத்து மாநிலங்களும் கொள்முதல் செய்ய வேண்டும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு முன்பாகவே தமிழக அரசு 1 லட்சம் கிட்கள் வாங்க சீனாவிடம் தனிப்பட்ட முறையில் ஆர்டர் போட்டது.

சுகாதாரப் பணியாளர்கள்
ரேபிட் டெஸ்ட் கிட்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. இந்தியாவுக்கு வந்துவிட்டால் நமக்கு அது கிடைத்துவிடும். முதல்வர்களுடனான ஆலோசனையின் போது ரேபிட் டெஸ்ட் கிட்கள் இந்தியாவுக்கு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். கூடுதலாக 50 ஆயிரம் கருவிகளை நாங்கள் ஆர்டர் செய்துள்ளோம். கடந்த 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு "கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாரதார பணியாளர்கள் (களப் பணியாளர்கள்) நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் விரைந்து சோதனை செய்ய வேண்டும்.

டெஸ்ட் கிட்
அது போல் கன்டெய்ன்மென்ட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும். எனவே நமக்கு ஏராளமான கருவிகள் வேண்டும்" என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதனால் மேலும் 2 லட்சம் கருவிகளை ஆர்டர் செய்தோம். எனவே மொத்தமாக 4 லட்சம் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. சீனாவில் குறைந்த அளவிலான நிறுவனங்கள் மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்களை தயாரிக்கின்றன.

சீனா உறுதி
தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்காவுக்கு சீனா அனுப்பிவிட்டது. நாம் முன்னரே ஆர்டர்களை செய்துவிட்டதால் முதற்கட்டமாக 50 ஆயிரம் கருவிகளையும் அடுத்த கட்டமாக 50 ஆயிரம் கருவிகளையும் அனுப்புவதாக சீனா உறுதியளித்திருந்தது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications