மறைந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன.. விஜே சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே?.. பிரபல நடிகை பகீர் பேட்டி
சென்னை: விஜே சித்ராவின் உடல் உறுப்புகள் குறித்து அவருடைய தோழி ஒருவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நாயகி விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் கொலை என சித்ராவின் தாயார் புகார் அளித்திருந்தார். அவர் சித்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த ஹேமந்த் என்பவருடன் தங்கியிருந்தபோதுதான் இது போன்றதொரு சம்பவம் நடந்தது என சித்ரா தாயார் புகார் கூறினார்.

தூக்கிட்டு தற்கொலை
மேலும் தனது மகள் உயரத்திற்கு ஃபேனில் தூக்கு போட்டுக் கொள்ள முடியாது என்பது அவரது தாயின் வாதம். மேலும் ஹேமந்த்தான் தனது மகளை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டதாகவும் சித்ரா குடும்பத்தினர் புகார் கொடுத்திருந்தனர். மேலும் சித்ராவின் கழுத்தில் நகக் கீறல்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை
ஆனால் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது. அது போல் அவரது கழுத்தில் உள்ள நகக் கீறல்கள் சித்ரா தூக்கிட்டு கொண்ட போது வலி தாங்க முடியாமல் அந்த கயிற்றை அவிழ்ப்பதற்காக முயற்சித்த போது ஏற்பட்ட காயங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

சித்ரா குடும்பத்தினர்
எனினும் இதை சித்ரா குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். ஏற்கெனவே சித்ராவுடன் ஹேமந்த் பல முறை தகராறில் ஈடுபட்டதாக தாயாரும், சித்ரா ஆண்களுடன் நடிக்கக் கூடாது என கண்டிஷன் போட்டு டார்ச்சர் செய்ததாகவும் அவரது தோழிகள் தெரிவித்தனர். மேலும் சித்ரா , பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனுடன் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியில் நடனமாடினார். அதுவும் ஹேமந்துக்கு பிடிக்கவில்லை.

சந்தேக கண்
இதனால் தினம் தினம் சந்தேக கண்ணுடன் சித்ராவை சுற்றி சுற்றி வலம் வந்துள்ளார் ஹேமந்த். திருந்திவிடுவார் என நினைத்த சித்ராவுக்கு ஏமாற்றமே விஞ்சியது. சித்ரா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் வரத் தொடங்கிவிட்டார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ராவை காத்திருந்து அவர் யார் யாருடன் நடிக்கிறார் என கண்காணித்து அவரை அழைத்து செல்லும் செயலையும் ஹேமந்த் செய்துள்ளார்.

விஜய் டிவி நிகழ்ச்சி
சம்பவம் நடந்த அன்று இரவு கூட விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சித்ரா கலந்து கொண்டார். அது நள்ளிரவு வரை சென்ற நிலையில் அவ்வப்போது சித்ராவுக்கு ஹேமந்த் போன் செய்து டார்ச்சர் செய்தது தெரியவந்தது. மேலும் சித்ராவிடம் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கியதாகவும் சித்ராவினுடைய தோழி சரண்யா தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகள்
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் சித்ராவின் மரணத்தில் இருந்து வெளியே வர எனக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டது. விஜே சித்ராவின் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்தேன். சித்ராவின் அம்மாவுக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் சித்ரா மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் போனில் தெரிவித்தார்.

ஷூட்டிங் சமயம்
விஜே சித்ரா டிசம்பர் 9ஆம் தேதிக்கு முன்பு என்னோடு இருந்தார். பின்னர் கேமராவின் முன்பு அவசர அவசரமாக ஷூட்டிங் சமயத்தில் சித்ராவிடம் கையெழுத்து வாங்கினார். அந்த கஷ்டத்தில் இருக்கும் போது கூட விஜே சித்ரா சிரித்துக் கொண்டேதான் இருந்தார். விஜே சித்ரா மரணம் தொடர்பான விசாரணையின் போது வருவாய் கோட்டாட்சியரிடம் நானே பல கேள்விகளை கேட்டுள்ளேன்.

உடல் உறுப்புகள்
சித்ராவின் மரண வழக்கு இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பல விஷயங்களை நான் கூறக் கூடாது. விஜே சித்ராவின் மரணம் குறித்து அனைத்து பரிசோதனைகளையும் செய்துவிட்டார்கள். சித்ராவின் ஒவ்வொரு உறுப்புகளும் தற்போது வரை தடயவியல் துறையிடம் இருக்கிறது என நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications