Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று 15 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை மையம் வார்னிங்! உங்க ஊர் இருக்கானு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று 15 மாவட்டங்களில் கனமழை இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை தான் கரையைக் கடந்தது. மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும், சூறாவளிக் காற்றும் வீசியது.

இருப்பினும் மாண்டஸ் புயல் காரணமாக நல்வாய்ப்பாகப் பெரியளவில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. மாண்டஸ் புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், இன்னுமே கூட தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 15 மாவட்டங்களில் கனமழை

15 மாவட்டங்களில் கனமழை

இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 வரும் நாட்கள்

வரும் நாட்கள்

நாளை டிச.12 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், வரும் டிச. 13, 14 தேதிதகளில தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. வரும் டிச. 15ஆம் தேதி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 100 மிமீ மழையும், திருப்பத்தூர் வடபுதுப்பட்டு 90 மிமீ மழையும், ஆம்பூரில்80 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் டிச.13 வரை லட்சதீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச. 14,14 தேதிகளில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் ஆன அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

முன்னதாக வடகிழக்கு பருவமழை உருவான பிறகு முதல் புயலாக மாண்டஸ் புயல் கடந்த வாரம் உருவானது. இது நேற்று முன்தினம் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையைக் கடைந்தது. சென்னை மற்றும் புதுவைக்கு இடையே கரையைக் கடக்கும் 14ஆவது புயல் இந்த மாண்டஸ் புயலாகும். புயல் கரையைக் கடந்த போது அதிகபட்சமாக 80-85 கிமீ வரை காற்று வீசியுள்ளது. நல்வாய்ப்பாக இந்தப் புயல் வர்தா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+