இன்று 15 மாவட்டங்களில் காத்திருக்கும் கோடை மழை! வெயிலை தணிக்கும் சில் கிளைமேட்! எங்கெல்லாம் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடுமையான வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையில், வரும் காலத்தில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் கடுமையாகவே நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வெப்பத்தின் தாக்கத்தை இந்த கோடை மழை குறைக்க உதவியுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வானிலை மையம்

வானிலை மையம்

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ஏப்ரல் 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 15 மாவட்டங்களில் மழை

15 மாவட்டங்களில் மழை

இதனால் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 வரும் நாட்கள்

வரும் நாட்கள்

ஏப்ரல் 4,5 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

சென்னை

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மழை

மழை

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேடசந்தூர் (திண்டுக்கல்), பாலக்கோடு (தருமபுரி), தலா 12 செமீ மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல , காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 10 செமீ மழையும், பாப்பாரப்பட்டி Agro (தருமபுரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) தலா 9 மழையும் பதிவாகியுள்ளது. இது தவிரப் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+