கொரோனா தடுப்பு... குறைகள் தீர்ப்பு... பிறகு தான் எல்லாம்... ஸ்டாலின் முன்னெடுக்கும் 2 அஜெண்டா..!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் உறுதியாக உள்ள ஸ்டாலின், மே 2-க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இப்போதே கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
அதன் வெளிப்பாடாக தான் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று வீடியோ கூட வெளியிட்டிருந்தார். அதில் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அறிவுறுத்தவும் செய்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார நிகழ்வின் போது தன்னிடம் அளிக்கப்பட்ட குறைதீர்க்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை ஆகிய இரண்டுக்கும் அதி முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை தரவிருக்கிறார் ஸ்டாலின்.
கடந்த ஒரு வாரமாகவே இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், கொரோனா இல்லாத தமிழகம் என்ற நிலையை அடுத்த 6 மாதங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் சைலண்டாக இறங்கியிருக்கிறார்.
இதற்காக நோய் தடுப்பு பணிகளுக்கு என ஸ்பெஷல் டீம் ஒன்றையும் மே 2-க்கு பிறகு மாவட்ட வாரியாக உருவாக்க இருக்கிறார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு சற்றும் குறையாமல், மக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைக்கும் அவர் முன்னுரிமை கொடுக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு விவகாரங்களுக்கு அடுத்தபடியாக இந்த கல்வியாண்டை எப்படி கொண்டு செல்லலாம், மாணவர்களின் கற்றல் திறனை எந்த வகையில் இணைய வழியில் மேம்படுத்தலாம் என்பது பற்றியும் ஸ்டாலின் சிந்தித்து வருகிறாராம்.
இதனிடையே மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள முதல்வர் இ.பி.எஸ். தரப்பும், கொரோனா ஒழிப்பு குறித்து டிஸ்கஷன் நடத்தி வருகிறது.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications