ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட போகும் சின்னம் எது தெரியுமா? அவரே கொடுத்த பதில் இதுதான்
சென்னை: பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சையாக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட விருப்பமாக கோரிய சின்னங்கள் எது என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:-

வாளி, பலாபழப்பம், திராட்சை, உள்ளிட்ட ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளேன். அதிமுக சார்பாக எனக்கு ஆதரவாக வேலை பார்த்த முன்னாள் அமைச்சர்கள் தற்போது எனக்கு எதிராக வேலை பார்க்க போவதாக கேட்கிறீர்கள். இது கால சூழ்நிலை.. காலத்தின் சூழலுக்கு ஏற்ப அவர்கள் வேலை செய்கிறார்கள்.
இதை நாம் குற்றமாக சொல்ல முடியாது. அதிமுகவில் எம்ஜிஆர் வகுத்த சட்ட விதிகளின்படி தான் இருபெரும் தலைவர்களும் வழிநடத்தினார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையை நாம் பின்பற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன்படி தான் நடக்க வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிலைப்பாடு.. பொதுமக்களின் நிலைப்பாடும் இதுதான்” என்றார்.
போனை போட்டு பேசிய அமித் ஷா.. ஓ பன்னீர்செல்வத்திற்கு மத்திய அமைச்சர் பதவி உறுதி? ஆஹா இது வேறயா!
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. இதனால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிந்து வேட்பு மனு தாக்கலையும் ஏறத்தாழ முடித்துவிட்டன. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் இன்று தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாக காட்சி அளித்தன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications