பாலஸ்தீன் அதிபரை விருந்தினராக அழைத்த இந்திரா காந்தி.. பாசிச இஸ்ரேலை மோடி ஆதரிக்கிறார் - வன்னியரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையிலான போர் உக்கிரமடைந்து இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் முடிவில் இஸ்ரேல் தமது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேலை ஆதரிக்கப்போவதாக இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடியும் அறிவித்து விட்டார். இதைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களின் பார்வையும் நம்மூரு செய்தித்தாள் போல ஆகி விட்டது. அதாவது, பாலஸ்தீனத்தை பாதுகாக்க போராடும் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாதிகளாக பார்க்கும் பார்வை நாளிதழுக்கு மட்டுமல்ல; மோடிக்கும் இருக்கிறது.

While Indira gandhi supported Palestine, But Modi supportes Israel - Vanni Arasu

ஆனால், பாலஸ்தீனத்தை ஆதரித்தது மட்டுமல்லாது, பாலஸ்தீன அதிபர் யாசர் அராபாத் அவர்களை இந்தியாவுக்கு விருந்தினராக அழைத்து சிறப்பு செய்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். அப்படிப்பட்ட உறவை இன்றைக்கு சிதைத்துள்ளார் மோடி. அது சரி எப்படி இஸ்ரேல் உருவானது? யூதர்களுக்கென ஒரு நாடு இல்லை. ஆனால், உலகம் முழுக்க சிதறிக்கிடக்கும் யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க படாதபாடு படுகின்றனர். பாலஸ்தீனமும் இந்தியாவை போல இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்தது. 1948 மே 14 ம் அன்று பாலஸ்தீனம் விடுதலையானது.

இச்சூழலில், யூதர்கள் பாலஸ்தீனத்தை குறிவைக்க ஆரம்பித்தனர். இதற்கு இங்கிலாந்தும் உதவ ஆரம்பித்தது. பாலஸ்தீனத்தின் நிலப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக விலை கொடுத்து வாங்கினர் யூதர்கள். (ரியல் எஸ்டேட் வியாபாரம் போல). 1922 ல் 90,000 யூதர்களை பாலஸ்தீனத்தில் குடி அமர்த்தியது பிரிட்டன். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பாலஸ்தீனத்தை மூன்றாக பிரித்தது ஐ.நா.சபை. 7 சதவீதம் வாழும் இசுலாமியர்களுக்கு 43 சதவீத நிலமாகவும், 30 சதவீதம் குடியேற்றம் செய்யப்பட்ட யூதர்களுக்கு 56 சதவீத நிலப்பரப்பாகவும் பிரித்தது.

இந்த நிலப் பிரிவினைக்குப் பின்னால் பிரிட்டனே இருந்தது. இப்படி தான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஆனால்,இந்தியா தொடர்ந்து பாலஸ்தீனத்தையே ஆதரித்து வந்தது. அதுமட்டுமல்லாது, பாலஸ்தீன விடுதலை இயக்க (PLO) அலுவலகம் தில்லியில் திறக்கப்பட்டது. இஸ்ரேல் - யூதர்களின் ஆக்கிரமிப்பு போக்கை இந்தியா ஒரு போதும் ஆதரித்தது இல்லை. இச்சூழலில் இன்றைக்கு நடக்கும் இந்த யுத்தம் எப்படிப்பட்ட பின்னணியில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்வோம்.

மோடியின் இப்போதைய ஆதரவு அமெரிக்க நிலைப்பாடாகவே மாறியுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்று நாஜி படைகளால் வேட்டையாப்பட்ட யூதர்கள், தற்போது தீவிர வலதுசாரி பாசிஸ்ட்டுகளாக உருமாறி பாலஸ்தீனர்களின் உரிமைகளை மறுத்து, திறந்தவெளி சிறைச்சாலையாக காஸா மற்றும் மேற்கு கரையை முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளனர்.

பாலஸ்தீனர்கள் இனவழிப்பை நியாப்படுத்தி பேசியும், செயலப்டுத்தியும் வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்துத்துவ பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தனித்த நிலைப்பாடு கேள்விக்குரியதாகவே மாறிப்போனது பெரும் ஆபத்தான நிலைப்பாடாகும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+