+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு?
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை நிறுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இலவச லேப்டாப் கோரி அண்மையில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

கல்விக்கு உதவி
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வாழ்வை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறிந்து வைத்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. சுமார் 500 கோடியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு வாக்குறுதி
இந்நிலையில் 2017-2018, 2018-2019ம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பல ஆயிரம் மாணவர்களுக்கு இன்னும் முழுமையாக லேப்டாப் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இதனிடையே லேப்டாப் கோரி மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தியதும், அவர்களிடம் லேப்டாப் தரப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய முடிவு
ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பை தேர்ச்சி பெறாதவர்கள் இலவச லேப்டாப்பை வாங்கும் தகுதியை இழக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

லேப்டாப் கொள்முதல்
தமிழக அரசு எல்காட் நிறுவனத்திடம் இருந்தே பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப்பை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் அரசு தரப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications