+2 வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு லேப்டாப் கட்... பள்ளிக்கல்வித்துறை முடிவு?
சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதை நிறுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இலவச லேப்டாப் கோரி அண்மையில் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் அரசு இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

கல்விக்கு உதவி
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வாழ்வை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறிந்து வைத்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கி வருகிறது. சுமார் 500 கோடியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு வாக்குறுதி
இந்நிலையில் 2017-2018, 2018-2019ம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பல ஆயிரம் மாணவர்களுக்கு இன்னும் முழுமையாக லேப்டாப் வழங்க முடியாத நிலை இருக்கிறது. இதனிடையே லேப்டாப் கோரி மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தியதும், அவர்களிடம் லேப்டாப் தரப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

புதிய முடிவு
ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பை தேர்ச்சி பெறாதவர்கள் இலவச லேப்டாப்பை வாங்கும் தகுதியை இழக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் 70,000 பேர் வரை தமிழக அரசின் இலவச லேப்டாப் பெற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

லேப்டாப் கொள்முதல்
தமிழக அரசு எல்காட் நிறுவனத்திடம் இருந்தே பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப்பை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட எண்ணிக்கையில் அரசு தரப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications