உங்க கிட்டதான் பவர் இருக்கு! ஓபிஎஸ்ஸுக்கு கொம்பு சீவிவிட்ட அரசியல் புள்ளி.. ஓ இவர்தான் மாஸ்டர் மைண்டா
சென்னை: சென்னையை சேர்ந்த முக்கிய அரசியல் "புள்ளி" ஒருவரை ரகசியமாக சந்தித்திருக்கிறார் ஓபிஎஸ். இந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் அவருக்கு சட்ட ரீதியாக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
அதேபோல் அதிமுகவின் வங்கி கணக்குகளை பராமரிக்க அனுமதி கேட்டு எடப்பாடி அனுப்பிய கடிதத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டது. இப்படி ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் அவருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ்
இதனால் ஓபிஎஸ்சும் அப்செட்டானார். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த முக்கிய அரசியல் "புள்ளி" ஒருவரை ரகசியமாக சந்தித்திருக்கிறார் ஓபிஎஸ் ! அந்த சந்திப்பில், தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை "புள்ளியிடம்" சோகமாக பகிர்ந்து கொண்ட ஓபிஎஸ், அதிமுகவின் வங்கி கணக்கு வழக்குகளை பராமரிக்கும் அனுமதியையும் எடப்பாடிக்கே சென்றிருப்பது குறித்து ஏகத்துக்கும் புலம்பியுள்ளார்.

அரசியல் புள்ளி
அவரை சமாதானப்படுத்திய அரசியல் புள்ளி, ' ரிசர்வ் வங்கியிடம் நீங்கள் முறையிடலாமே ' என்கிற யோசனையை சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அதிமுக கட்சி யாருக்கு சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றங்கள் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் நீங்கள் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அதனால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நீங்கள் இயங்குங்கள்.. உங்க கிட்டதான் அந்த பவர் இருக்கு என்ற அட்வைசையும் கொடுத்துள்ளார் அந்த புள்ளி.

அரசியல் புள்ளி யார்?
அந்த அரசியல் புள்ளி ஏற்கனவே தமிழ்நாடு அரசியலில் இது போன்ற சில சமரச பணிகளை, தூது பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அந்த அரசியல் புள்ளி சொன்ன யோசனைகள் ஓபிஎஸ்சுக்கு தெம்பை கொடுத்ததாம். அதனால் சந்திப்பு முடிந்து வந்ததுமே, ' எடப்பாடியின் கடிதத்தை வங்கிகள் ஏற்றது முறை அல்ல ' என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதினார் ஓபிஎஸ் ! அதனையடுத்து, கட்சியில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த, மா.செ.க்களை புதிதாக நியமித்து அறிவித்து வருகிறார்.
Recommended Video

14 மாவட்டங்கள்
தற்போது 14 மாவட்டங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. இந்த லிஸ்ட் இன்னும் தொடரும். ஓபிஎஸ்சின் சமீபகால நடவடிக்கைகளுக்கு அந்த புள்ளியின் யோசனை தான் காரணம் " என்கிறார்கள் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்கள். பாஜக அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் எதிரான அரசியலை செய்வதற்காகவே ஓபிஎஸ்சுக்கு அந்த அரசியல் புள்ளி உதவி வருவதாகவும், தேவைப்படுகிற போதெல்லாம் ஓபிஎஸ்சுக்கு அந்த புள்ளி கொம்பு சீவி விடுகிறார் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications