நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம்.. அதிரடி தீர்ப்புகளுக்கு சொந்தக்காரர்!
சென்னை: நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் ஆவார்.
இவர் அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க ஆணையிட்டவர் ஆவார். நடிகர் விஜய் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார்.
அந்த காருக்கு இறக்குமதி நுழைவு வரி ரூ 1.6 கோடியை அவர் செலுத்தவில்லை. இதனால் அவரது காரை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் பதிவு செய்யவில்லை.

ரோல்ஸ்ராய்ஸ் கார்
இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வருமான வரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி
இந்த மனுவை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் வரி என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. புகழ் பெற்ற நடிகர்கள் உரிய நேரத்தில் வரி செலுத்தி முன்னுதாரணமாக திகழ வேண்டும். எப்போதும் ரீல் நடிகராக இருக்க கூடாது, ரியல் நடிகராக இருக்க வேண்டும் என கூறி விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதித்ததுடன் அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

அபராதம்
அந்த அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் யார் என்பதை பார்ப்போம். இவர் புதிய தலைமைச் செயலக முறைகேடு புகார் தொடர்பான விசாரணை ஆணையம் கண்துடைப்பு என விமர்சித்தவர்.
Recommended Video

சிசிடிவி கேமரா பொருத்தம்
அது போல் அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டவர். மேலும் தான் முன்னுதாரணமாக திகழ தனது அறையில் சிசிடிவி கேமராவை பொருத்திக் கொண்டவர். அது போல் அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு தொடங்க ஆணையிட்டவர். இத்தகைய உத்தரவுகளை வழங்கிய நீதிபதிதான் தற்போது விஜய்க்கு அபராதம் விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications