அதிமுக ஆட்சியில் ஓரம்கட்டப்பட்ட "பொறியாளர்".. புது டிஜிபி சங்கர் யார்? ஸ்டாலினின் மாஸ் அசைன்மெண்ட்
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கு.. அதாவது சங்கர் ஜிவால் ஐபிஎஸ்ஸுக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இந்த மாதம் 28ம் தேதியோடு முடிகிறது. இதையடுத்து புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்று உள்ளதாம். இவர்களின் லிஸ்டை மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ளது.

அங்கே நடத்தப்பட்ட ஆலோசனையில் 3 பேரின் பெயர்கள் தேர்வாகி மீண்டும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.இதையடுத்து தமிழ்நாடு அரசு சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவாலை டிஜிபியாக நியமனம் செய்யும் என்று கூறப்படுகிறது. சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
யார் இவர்?: 1990 பேட்ச் அதிகாரியான ஜிவால், உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சேர்ந்தவர். அவர் சேலம் மற்றும் மதுரையில் காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி காவல் ஆணையராகவும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குநராகவும் இதற்கு முன் இருந்துள்ளார். தற்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.
2008ல் ஐ.ஜி., உளவுத்துறை (உள் பாதுகாப்பு) ஐ.ஜி., ஆக உயர்த்தப்பட்டார். 2011ல், ஆறு ஆண்டுகள் ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்ட சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கினார். ஜிவாலுக்கு 2007ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கமும், 2019ல் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.
உளவுத்துறையில் சிறந்த அனுபவம் கொண்ட இவர் இன்ஜினீயரிங் படித்தவர். தமிழ், ஆங்கிலம் , இந்தியில் நல்ல புலமை கொண்டவர். அதேபோல் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியும் தெரிந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமாக ஓரம்கட்டப்ப சங்கர் ஜிவால் திமுக ஆட்சியில் மீண்டும் சீனிற்கு வந்தார். அதன்பின்தான் இவர் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கு முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசைன்மெண்ட்: அதன்படி தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக பணிகளில் பல ஆர்எஸ்எஸ் ஆட்கள், பாஜக ஆட்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். இவர்கள்தான் தற்போது இருக்கும் ஆட்சியை பற்றிய சீக்ரெட்டுகளை வெளியே சொல்லி வருகிறார்கள். பல முக்கியமான விஷயங்கள் வெளியே கசிவது இவர்கள் மூலம்தான் என்று கூறப்படுகிறது.
கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் சித்தராமையா இது போன்ற நிர்வாகிகளை அடையாளம் கண்டு தூக்கும் பணியில் இறங்கி உள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்தது இரண்டு வருடம் ஆகியும் ஸ்டாலின் இந்த நடவடிக்கைகளை எடுக்காத நிலையில்.. புதிய டிஜிபி மூலம் போலீஸ் துறையில் , உள்துறையில் இருக்கும் இது போன்ற வலதுசாரி சார்பு அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications