அசைந்தது அயனாவரம்.. பர்தா போடாமல் போன பாத்திமா.. பிரியாணி கரண்டியுடன் உமர்.. சென்னையில் இப்படியுமா?
சென்னை: பிரியாணி கரண்டியாலேயே பாத்திமாவை அடித்து தாக்கி உள்ளார் உமர்.. இப்ப பார்த்தீங்களா என்னாச்சுன்னு? சென்னையே அரண்டு போய் கிடக்கிறது.
சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வசித்து வருகிறார் சையத் அலி பாத்திமா.. 36 வயதாகிறது.. இவருக்கு 6 மாதத்திற்கு முன்னாடிதான் கல்யாணம் ஆனது.

திருமணம்: அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.. ரவிக்குமாருக்கு 37 வயதாகிறது.. இவருக்கு உமர் என்று இன்னொரு பெயரும் உண்டு.. கல்யாணம் ஆன 6 மாதத்திலிருந்தே பாத்திமா, தன்னுடைய மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்...
கீழ் கட்டளை பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.. ஆனால், சமீபகாலமாகவே, உமர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது..
கருத்து வேறுபாடு: இதை காரணமாக வைத்தே மாமியாருக்கும் - மருமகளுக்கும் சண்டை வந்துவிட்டது.. இவர்கள் 2 பேரின் கருத்து வேறுபாடு காரணமாக, வீடே தினம் தினம் சண்டையால் வெடித்தது. எனவே, கடந்த 9-ம் தேதி பாத்திமாவின் அம்மா, பல்கீஸ் அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் ஒரு வாடகை வீடு பார்த்து தங்களது மகளையும், அவரது கணவரையும் அனுப்பி வைத்துள்ளார்..
அந்த புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய பாத்திமா வீட்டருகே உள்ள நண்பர்களுக்கு, காய்ச்சிய பால் கொடுக்க சென்றுள்ளனர்.. அப்போது பாத்திமா பர்தா அணியாமல் சென்றதை பார்த்த உமர், தகராறில் ஈடுபட்டுள்ளார்..
பிரியாணி கரண்டி: இதுவே அவர்களுக்குள் வாக்குவாதமாக முற்றியிருக்கிறது. பிரியாணி கரண்டியால் பாத்திமா தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் பாத்திமாவுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. பலத்த காயமடைந்து மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
ஆனாலும், உமர் எதையும் கண்டுகொள்ளாமல், வீட்டில் இருந்த 2500 ரூபாய் பணத்தையும் எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனிடையே பாத்திமாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு முதலில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், பிறகு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் பாத்திமா அனுமதிக்கப்பட்ட நிலையில், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், சிகிச்சை பலனின்றி பாத்திமா இன்று உயிரிழந்தார்..
பர்தா : இதனால் ஏற்கனவே பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உமரை கைது செய்து, சிறையிலும் அடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
பர்தா அணியாமல் சென்ற மனைவியை பிரியாணி கரண்டியால் கணவனே அடித்துக் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், உயிர் பிரியும்வரை பாத்திமாவுக்கு சுயநினைவே இல்லையாம்..!!!
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications