Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்…டெல்லியில் ஆலோசனை..இறையன்பு, அமுதா, சைலேந்திரபாபு பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.

தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு அடுத்து இந்த முக்கியமான பொறுப்பில் அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Who will be the next DGP of Tamil Nadu Consultation in Delhi

புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான இறுதிக்கட்ட ஆலோசனை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்று டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்பது உறுதியாகிவிடும்.

இதற்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு ஐஏஎஸ், உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு தலைமை பொறுப்பான டிஜிபி பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைந்தபோது காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பில் முதல்வர் ஸ்டாலின் யாரை நியமனம் செய்ய விரும்புகிறார் என்ற ஆர்வம் அத்தனை பேர் மத்தியிலும் எழுந்த நிலையில் சைலேந்திரபாபு ஐபிஎஸ் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த பரிச்சயம், மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற அறிமுகம் அவரது நியமனத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

சைலேந்திரபாபு வரும் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த டிஜிபியாக யாரை நியமிக்க ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளர் இறையன்பு, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு செல்கின்றனர்.

அதில் , பணி மூப்பு, தகுதி, திறமை அடிப்படையில் முதல் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் தேர்வு செய்து தமிழக அரசிடம் வழங்குவர். அதில் இருந்து ஒருவரை தமிழ்நாட்டின் டிஜிபியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்யலாம். அந்த பட்டியலில் ஊர் காவல் படை தலைவராக உள்ள பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையராக உள்ள ஷங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய தலைவராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன், டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவர் தமிழகத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+